பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix ஈடுபட்டுக் கண்ட பலன் இது தானா? ஒரு ஆயிரம் பேர்கள்! - Gufr・ チ。女f。 இலக்கியச் சிற்பி. சிறுகதையின் பிதாமகர். கனவோடை உத்தியை முதன் முதலா கத் தமிழில் கையாண்டவர். கவிதை ததும்பும் உரை கடை ஆட்சி கொண்டவர். லா, ச. ராவின் முத்திரையை அவருடைய பெயர் இல்லாமலே அடையாளம் கண்டு கொள்ளலாம். படிக்கும் ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு புது அர்த்தம், புது வெளிச்சம் தெரியும். லா. ச. ராவின் ஆத்ம விசாரணை, தமிழில் கற்பனை இலக்கியத்துக்குப் புதிது. லா, ச. ரா. தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரிய சகாப்தம். தம்பி, மலைக்காதே, உன்னைப் போல் வாசகர்களின் பாஷைதான். இது போன்ற பாராட்டுக்களிலே ஒரு அர்ச்ச னையே தயாரித்து விடலாம். ஆனால் என்ன ப்ரயோ ஜனம்: ஒன்று சொல்கிறேன். நாட்டில் எத்தனையோ மாறுதல்கள் கடந்திருக்கின்றன. ஆனால் எழுத்தாள னின்-பொருளாதார சிலைமை மட்டும், என்னைப் போன்றவர்களுக்கு, கான் எழுத ஆரம்பித்த காலத்தி லிருந்து இன்னும் மாறவில்லை.