4270 கம்பன் கலை நிலை தாரார் புரவிக்கடல் பின்செலத் தானேவிரப் பேராழி முகம்செலச் சென்றனன் ப்ேர்ச்சியில்லான். (4) இந்திரசித்து தேர்மேல் ஏறிப் போர்மேல் சென்றிருக்கும் கிலையைக் கவி இங்ங்னம் காட்டியிருக்கிருர். அதிசயமான வீரக் காட்சிகள் வியந்து நோக்கவந்துள்ளன. அமரர்கோனே வென்ற அற்புதவிரன் அளவிடலரிய சேனைகளோடு சமர பூமியைநோக்கி வந்தது அமரர்முதல் யாவரும் அஞ்சி அயரும்படி உக்கிர விர மாய் ஒங்கி நின்றது. யாண்டும் வெற்றியே கண்டவன் விறு கொண்டு தேர் ஊர்க் துவக்கான் ஆதலால் அவனுடைய சீரும் சிறப்பும் விரப்பிரதாபமும் நேரே தெரிய வங்கன. எத்தேவரையும் முகம்கண்டு அறியா ஈட்டான். இந்திரசித்தனது சுத்த வீரத்தையும் வித்தக வெற்றியையும் இது விளக்கியுள்ளது. தன்னேடு போராட நேர்ந்த தேவர் யாவ ரும் புறமுதுகு காட்டி ஒடியுள்ளமையால் முகம் கண்டு அறியான் என்ருர். அவனது வெற்றித்திறலின் நிலையை இப்படி வித்தக விகுேதமா விளக்கியுள்ளார். இந்திரனை வென்ற வீரசுந்தரன் வரு கின்ருன்! என்று வழி எங்கும் பேய்கள் ஆரவாரம் செய்யப் பெருமேன்மையோடு பொருமுகம் நோக்கி வந்தான். சேமத் தேர்கள் பல்லாயிரம் சேர்ந்துவந்தன. சேனைக்கடல்கள் இடங் கள்தோறும் பரந்து விரிந்து செறிந்து நடந்தன. யாண்டும் தாளிப்படலங்கள் நீண்டு விரியப் பேரொலிகள் பெருகப்படை கள் மூண்டு வருகலைக் கண்டு இலக்குவன் வீடணனை நோக்கி வினவ நேர்ந்தான். வினவிய நிலை விசயம் மிகவுடையது. இலக்குவன் கிலே. அதிகாயனைக் கொன்று முடித்தவுடன் அந்த வென்றி நிலை யில் இளையவன் அண்ணனிடம் செல்லவில்லை. மூண்டுவந்து பொருது மாண்டுபோனவன் இலங்கைவேங்கனுடைய அருமை மகன் ஆதலால் மீண்டும் உடனே பெரிய படைகளோடு அரிய தலைவர்கள் வருவார்கள் என்று இலக்குவன் கருதி ஆண்டே கின்ருன். எய்திய வெற்றியை எளிதாகநினைந்து மேலும் போரை விரும்பி அந்தப்போர்க்களக்திலேயே அமர்ந்து சேனைகளை எதிர் நோக்கியிருந்த இந்த விர மகனுடைய மன நிலையையும் வித்தகக்