399-Ꮞ கம்பன் கலை நிலை இவ்வாறு உள்ளம் கனன்று உருத்து அடித்தும் அவனே எழுப்ப முடியவில்லை. பின்னரும் பல வகையான படைகளைக் கொண்டுவந்து கெடிது முயன்று கடுமையாகத் தாக்கினர். முடிவில் சிறிது அசைந்தான்; படுத்தபடியே கண்களைத் திற்வா மல் துயில் மயலோடு தொடர்ந்து கிடந்தான்; மீண்டும் கடுத்து உணர்த்தினர்; கண்விழித்து எழுந்தான். எழுப்பிய அனைவரும் எமன் எதிரே அஞ்சி நிற்பவர் போல் நெஞ்சம் கலங்கி அடி மிசை விழுந்து தொழுது கின்றன்ர்; கடிதில் உணவுகள் வந்தன பரிசாரகர் பலபேர் வரிசை வரிசையாய் உண்டிகளை வ ச ரி க் கொண்டு வந்தனர். யாவும் உண்டான். அருங் திறலுடைய அவன் அருந்தியிருக்க நிலை அதிசய கம்பீரமாய்த் துலங்கி யிருக் தது. அந்த இருப்பு வியந்து சிந்திக்க வந்தது. இருந்த போதும் இராவணன் கின்றெனத் தெரிந்த மேனியன் திண்கடலின் திரை நெரிந்த தன்ன புருவத்து நெற்றியான் சொரிந்த சோரிதன் வாய்வரத் துாங்குவான். உறங்கி எழுந்து உணவுகள் அருந்தி மீண்டும் துயில் மய லோடு கும்ப கருணன் அமர்ந்திருந்த நிலையை இது குறித்துக் காட்டியுள்ளது. அவனுடைய உருவத் தோற்றம் பெரிய வியப் பினே விளைத்து அரிய ஒரு காட்சியாப் மருவி கின்றது. இருந்தபோதும் இராவணன்'கின்றுஎனத் தெரிந்த மேனியன். - அவனது உருவ நிலையைக் கவி இவ்வாறு நயமா அளந்து காட்டியிருக்கிரு.ர். இராவணன் இராச கம்பீரமான உயர்ந்த தோற்றம் உடையயிைலும் கம்பியோடு இணைத்து சோக்கும் போழுது அவன் தாழ்ந்தே கின்றுள்ளான்." கும்பகருணன் கீழே உட்கார்ந்திருந்தாலும் இராவணன் கின்றது போன்ற அவ்வளவு உயரமாய் நிலவித் தோன்றினன். யானை படுத்தாலும் ஆட்டினும் உயரம் என்னும் பழமொழியைக் கிழமையோடு இது நினைவுறுத்தி வந்துள்ளது. பிறப்பில் இளை யவன் ஆயினும் உருவம் முதலிய நிலைகளில் இனங்கை வேந்தனி அம் கும்ப கருணன் சிறப்புடன் உயர்ந்து விளங்கினன்.