பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,003 மைைம பேற்றுள்ள நாம் சிறிய ஒரு ைேமயால் சீ யூழிய நேர்ந் துள்ளோம். புலத்திய முனிவன் வழி புன்மையடைந்தது; நல்ல குலத்தியல்பு பொல்லாத இனத்தால் புலையடைய நேர்ந்தது, நிலத்தின் இயல்பால் நீர்திரிந்ததுபோல் கொடிய இனத்தின் இயல்பால் நீங்கள் இழிந்து நிற்பது என் மனத்தைக் ககித்து வருகிறது. நேர்ந்துள்ள நிலைமைகளைக் கூர்ந்து ஒர்ந்து நெஞ்சம் கவலுகின்றேன். மையல் மயக்கங்களில் மறுகியுள்ள உங்கள் செயல் பல கேடுகளுக்கு இட்மாயுள்ளது. அஞ்சி அடங்கி இருக்க இந்திரன் இனி மிஞ்சி அமரர் கோமானப் அரசு புரிய நேர்ந்தான்; நம் அரசும் கிளையும் குலமும் அழிய நேர்ந்தன; அமரர் யாவரும் ஆரவாரமாப் கம்மை இகழ நீண்டனர்; இவை யாவும் உங்கள் செயலின் பலன்களாய் விளைந்தன. எதிரியாயப் மூண்டுள்ள இராம இலக்குவரை வினே இகழ்ந்துபேசி நம்மை நாமே புகழ்ந்து கொள்ளுவதால் வெற்றியை அடைந்து கொள்ள முடியாது. அவருடைய மனம் மொழி செயல்கள் புனிதம் மிக வுடையன; நம்முடையன பழுது பட்டுள்ளன. அவர் நெஞ்சில் நேர்மையும் வாக்கில் சக்தியமும் செயலில் இனிமையும் வாய்க் துள்ளனர். நாம் வஞ்சமும் பொய்யும் பாவமும் தோப்ந்திருக் கிருேம். அவரை எப்படி நம்மால் வெல்லமுடியும்? நல்ல நீதி யுள்ள இடத்தில் தெய்வம் துணையாப் கின்று உரிமையோடு உதவி புரிகின்றது; பொல்லாத அநீதி எவ்வழியும் புலையாய் இழிந்து ஒழிகின்றது. அழிவு நிலை தெரியாமல் வினே களி மிகுத்து கிற் ப.து அவலமே யாம். எதிரியிடம் என்றும் எவரிடமும் காணுத அதிசய ஆற்றல்கள் குடி கொண்டிருக்கின்றன. அவன் ஏவிய ஒரு குரங்கு அரிய பெரிய நெடிய கடலை எளிதே கடந்து வந்து இலங்கை புகுந்து பாண்டும் கலங்காத அரக்கர் திரளைக் கலக்கி அழித்து ஊரைத் தீயைக் கொளுக்கிச் சுடுகாடு ஆக்கிவிட்டு வெற்றி விருேடு மீண்டு போயுள்ளது. இதைவிட நமக்குப் பழி யும் தோல்வியும் இழிவும் வேறு வேண்டுமோ? என்றும் வென்றி விரளுப் பாண்டும் அதிசய நிலையில் விளங்கியிருந்த வாலியை ஒரே பாணத்தால் இராமன் உயிரை வாங்கி யிருக்கிருன். அத் தகைய பானங்கள் எல்லையில்லாதன அவனிடம் இருக்கின்றன; காமும் இருக்கின்ருேம்; எமனும் இருக்கின்ருன்; ந ம க் )وقت ப் பிழைப்பு உண்டு என்று கருதினால் அது ஒரு கொடிய மடமை