பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4780 கம்பன் கலை நிலை சுத்த வீரனிடம் தோப்ந்து துதிகொண்டு நிற்கின்றது! ' என இன்னவாறு இளைய பெருமாள் எண்ணி எண்ணி இந்திரசித்தை வியந்திருத்தலால் அவனுடைய விரத் திறல்களையும் வில்லாடல் களின் வேகங்களையும் நாம் யூகித்து உணர்ந்து கொள்ளுகிருேம். மொய்கணே கோடி கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான். மேகநாதனுடைய தேகம் இருந்த நிலையையும், அவனது விர வேகத்தையும் இது விளக்கியுள்ளது. பகழிகள் உடல் முடுதி வதம் அடலோடு பா ப்ங்துள்ளன; அப்படி யிருந்தும் யாதும் கலங்காமல் ஏதும் எவ்வழியும் தளராமல் மோதி முனிந்து மூண்டு போராடி யிருக்கிருன். மானம் வீரம் குன்ருத அந்த மன நிலையை நினைந்து கினைந்து இலக்குவன் வியந்தான் ஆண்தொழில் ஆற்றல் இவைேடு எஞ்சும். தன்ளுேடு மூண்டு போராடி வந்த இந்திரசித்து ஆயுத பலங்களை இழந்தும் இழிந்து இளையாமல் உள்ளத்திறலோடு ஊக்கி உஞற்றி வருதலை நோக்கி இலட்சுமணன் இவ்வாறு புகழ்ந்திருக்கிருன். அஞ்சாக ஆண்மை அசையாக ஆற்றல் சிறந்த போர் வீரம் உயர்ந்த விரத்திறல் அவனிடம் ஒளிபுரிந்து மிளிர்வதையும், அத்தகைய அதிசய வீரன் அழிவடைய மூண் டுள்ளதையும் நினைந்து பரிந்து கெஞ்சம் இரங்கி இக் குலமகன் கூறியிருப்பது உயர் பெருக்ககைமையாய் ஒளி வீசியுள்ளது. இந்திரசித்து செத்தால் சுத்த விரமும் அவைேடு செத்த தாம் என இவ் வுத்தம விரன் சித்தம் வியந்து தன் உள்ளேயே விளம்பியிருத்தலால் மூண்டுள்ள முடிவுகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். வீரக் குரிசிலின் பரிவுரை வியப்பில் விளைந்தது. இனி மேகநாதன் மீண்டு போக முடியாது; மாண்டே விழுவான் என்று இந்த ஆண்டகை உறுதி செய்து ஊக்கி உருத் தாலும் அவனது பொருதிறலையும் பரிபவ நிலையையும் நோக்கி மறுகி நின்ருன். பெருந்தன்மை பெருங்கருணையாய் விரிந்தது. தெவ்வின் திறலை வியந்து நோக்கி அவ்வாறு இளையவன் அயர்த்து நிற்குங்கால் வீடணன் அருகே வந்தான். வெற்றியை விரைந்து பெற வேண்டும் என்று உற்ற உளவுகளே உறுதிபெற