பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5149 களை நினைந்து எங்கி விடிவு தெரியாது. வெருவி மயங்கினர். அவ னுடைய உக்கிர வீர நிலைகளை உம்பரும் இம்பரும் வி ய ந் து புகீழ்ந்தனர். அதிசய ஆற்றல் அடல்கொண்டு நீண்டது. கூற்றுக் கோடினும் கோடில, கடல்எலாம் குடிப்ப, நீற்றுக் குப்பையின் மேருவை நுாறுவ, நெடிய காற்றுப் பின்செலச் செல்வன, உலகெலாம் கடபட, நூற்றுக் கோடிஅம்பு எய்தனன் இராவணன் கொடியில். என்னகைக் கடுப்போஎன்பர் சிலர்.சிலர் இவையும் அன்ன மாயமே அம்பலஎன்பர்அவ் அம்புக்கு இன்னம் உண்டுகொல் இடம்என்பர் சிலர் சிலர் இகற்போர் முன்னம் இத்தனே முயன்றில ம்ைஎன்பர் முனிவர். (2) இராவணன் புரிந்துள்ள போராட்டத்தை வியந்து விண் னேரும் மண்ணுேரும் இன்னவாறு புகழ்ந்திருத்தலால் அன்று அவன் ஆற்றியிருக்கும் வெற்றி விர நிலைகளை உய்த்துணர்ந்து கொள்கிருேம். இறுதியை அறுதியிட்டு உறுதியாப்ப் போராடி யிருக்கிருன் உக்கிர விரங்கள் வேகமா ஓங்கியுள்ளன. அதிசயமான வாபலங்களோடு வாய்ந்துள்ள அத்திரங்களை யும் சத்திரங்களையும் யுத்த விருேடு எத்திசைகளிலும் வாரி விசிச் றிே ஏறிப் பொருதிருத்தலால் அவனது காவேக சாவேகங்கள் அதிவேகங்களா நீண்டு அமரர்எவன்ரயும் கதிகலன்க்ச்செய்தன. கூற்றினும் கொடியன; கடல்களைக் குடிப்பன; மேருவை நூறுவ; காற்றினும் கடியன; உலகெலாம் கடப்பன; அளவிட லரியன என்று உளம் மிக வியந்து அவனுடைய பகழிகளைப் பெருவியப்போடு யாவரும் போற்றிப் புகழ்ந்திருத்தலால் அவற். றின் அதிசய ஆற்றல்களை நேரே அறிந்து கொள்கின்ருேம். தனு வேதத்தின் விதிமுறைகளை வியனுகப் பயின்று நன்கு தெளிந்த வன் ஆதலால் கதி வேகங்களில் சிறந்த அம்புகளை அ தி ச ய வேகமாய் யாண்டும் கடுத்துத் தொடுத்து விடுத்திருக்கின்ருன். நூற்றுக் கோடி அம்பு இராவணன் நொடியில் எய்தனன். இலங்கை வேந்தன் வில்லாடல் புரிந்துள்ள வேக விலைகளை யும் விரத்திறல்களையும் இது விளக்கியுள்ளது) உள்ளம் கடுத்து எல்லையில்லாதபடிஎங்கும் அம்புகளை அவன் தாடுத்திருக்கிருன்,