7- இ ரா ம ன் 1F7
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் தூக்க கல்லருள் துறந்தனள் துாய்மொழி மடமான் இரக்கம் இன்மையன்றாே இன்றிவ் வுலகங்கள் இராமன் பாக்கும் தொல்புகழ் அமுதினேப் பருகுகின்றதுவே (9)
(மங்கரை சூழ்ச்சி 69-78)
இப்பகுதியைக் கருத்தான்றிக் கவனிக்க வேண்டும். போன்பு கிறைந்து நேர்மை நீர்மைகளில் சிறந்து நெறிமுறைகளில் கிலைக் கிருக்க கைகேசியின் தாய மனம் தீயதாகும்படி கூனிசெய்துள்ள மித்தி பேதங்கள் விசித்திர கதியில் விளைந்திருக்கின்றன.
இளையவனுக்கும் அரசுரிமை உண்டு என்று ஒரு போலிக் காரணத்தைக் காட்டிவிட்டுப் பின்பு மூத்தவனேச் சுட்டிப் பேசலானுள்.
1. இராமனே நீ நல்லவன் என்று எண்ணி இருக்கிறாய். அந்த எண்ணம் பிழைபாடுடையது. உன்னே வஞ்சித்து ஏமாற்று தற்காக அஞ்சனவண்ணன் பலவகையிலும் நெஞ்சம் களிக்க நடித்து வருகிருன். அவனுடைய வாவும் செலவும் காவுமிக உடையன. உண்மை கிலே இப்பொழுது உனக்குத் தெரியாது. நாளை மணிமுடி அவன் கலையில் ஏறட்டும் அப்பொழுது எல்லாம் தெரியும். தன் பொல்லாத் தனங்கள் எல்லாவற்றையும் உள்ளத் தில் ஒடுக்கி வைத்துக்கொண்டு காரிய சாதனையில் கண்ணுான்றிக் கள்ளம்புரிந்து வருதலைக் கருதியுணராமல் பிள்ளை என்று பேதை மகியால் நீ பிழை பட்டிருப்பது பெரிதும் தோம்.
இயற்கையிலேயே பொல்லாதவன யுள்ளவனுக்குப் பெரிய அாச செல்வமும் சேர்ந்தால் அவன் செய்யும் அல்லல்களுக்கு ஒர் எல்லை உண்டா ? எவ்வளவு நல்லவர்களாய் இருந்தாலும் செல்வம் கைவங்கால் சிங்தை கிரிந்து செருக்கு மீக்கூர்ந்து பெரி யோர்களை மதியாமல் பிழைகள் செய்ய நேர்வரே !
1. அறம் கிரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும்,
பெறலரும் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம், ! இந்த வாசகம் பெரிதும் சிந்தனைக்கு உரியது. கூனி வாயிலிருந்து எவ்வளவு பெரிய ஞான வாசகம் உதயமாகி யுள்ளது! பொல் லாக இடத்திலிருந்து ஒயோவழி அதிசயமான விளைவு கிளைத் தெழுதல் போல் கொடியவளிடமிருந்து இனிய நீதி எழுந்தது.