உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு சிஷ்யைகள்

127

“இந்த வர்ணம் எனக்கு எப்படி வரும்?”

“வாயால் வரும். மனத்தால், புத்தியால் வரும்.”

“ஊஹூம்; எனக்கு வரவே வராது. யாராவது எடுத்ததுமே, இந்த வக்ரராகத்தில் வர்ணத்தைக் கற்றுக் கொள்வார்களா? வருமா?”

“உனக்கு எல்லாம் வரும். நீதான் மகா புத்திசாலியாயிற்றே. பாடம் ஆகாத புது ராகத்தில் வேண்டுமென்று பைரவி ஆரம்பித்தவுடன் சொன்னவள் நீதான? உனக்கு இருபது ஆதிதாள வர்ணம் வரும்; அதாவது சுமாராகத் தெரியும். அதைத் தவிர, எனக்குத் தெரிந்த அடதாள வர்ணங்களின் அட்டவணை முன் பக்கத்தில் இருக்கிறது. அதில் உனக்கு எந்த ராகத்தில் வேண்டுமோ, அதைச் சொல்லு. ஆரம்பிக்கிறேன்’ என்றான் ஹரி.

சுசீலா விடுவிடென்று விழிகளைப் புத்தகத்தின் மேலும் கீழும் ஒட்டினாள். பிறகு சிரித்துக் கொண்டே, “இந்தக் கல்யாணி வர்ணம் சொல்லிக் கொள்ளுகிறேன்” என்றாள்.

ஹரி சட்டென்று, “முடியாது” என்று மறுத்தான். “உனக்கு ஆதிதாளத்தில் வனஜாட்சி பாடமாகியிருக்கிறதா இல்லையா?” என்று கேட்டான்.

“இருக்கிறது.”

“பிறகு வேறு ஏதாவது புதிதாகக் கேள்.”

“வேறு என்ன இருக்கிறது?”

“பஹூதாரியும், மனோரஞ்சனியும்.”

“அவை இப்போது எப்படி வரும்?” என்ற சுசீலா உடனே, “பரவாயில்லை. சங்கராபரணம், காம்போதி, மோஹனம், சாவேரி, தோடி, பந்துவராளி, ஆனந்த பைரவி இவற்றில் எதையாவது சொல்லிக் கொடு.” என்றாள்.