பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 புல்லின் இதழ்கள்

களும் சேர்ந்து விழவே, பக்கிரி லபக்கென்று பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டான்.

தம்பி, நீ பெரிய ஆளப்பா! கைநிறையப் பணத்தை வெச்சுக்கிட்டுத்தானே, இப்போ என்கிட்டே காலணாக டக் கிடையாதுன்னு பொய் சொன்னே. பரவாயில்லே, கோயில்லே இருநூறு ரூபாய் கொடுத்திருக்காங்களே’ என்று பக்கிரி கூறிக்க் கொண்டிருக்கும்போதே, காரிலிருந்த கோபால், ரெயிலுக்கு நேரமாகிவிட்டதை அறிவிக்க வண்டியிலிருந்தபடி ஹார்ன் அடித்தான். ஆனால் இ.தொன்றும் காதில் விழாமல் சிலைபோல் ஹரி அப்படியே பிரமித்து நின்று கொண்டிருந்தான்.