பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சும் அழகு 3.11

‘எனக்கு இந்த ஒர் இரவுதான்; அதுவும் சில மணி நேரந்தான் சொந்தம். அதற்குள், என் மனத்தில் உள் ளதை எல்லாம் உங்களிடம் கூறாவிட்டால், என் இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது. இந்த உலகில் நான் ஒர் அநாதை. எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?’ விக்கலும் விசும்பலுமாக இந்த வார்த்தைகளைக் கூறி முடிக்கு முன் காந்தாமணி சிறு குழந்தைபோல் அழுது விட்டாள்.

கண்களிலிருந்து வழிந்த கண்ணிர், ஆவி நீரைப் போல், அவன் புறங்கையின் மேல் உருண்டோடியது.

‘அழாதே, அழாதே. இப்போது என்ன நேர்ந்து விட்டது? உன் சத்தத்தைக் கேட்டு, அம்மா மேலே வந்து நிற்கப் போகிறாள். அப்புறம் எனக்கு இந்த வீட்டிலே வேலை இல்லை. அதற்குத் தான், இன்று நீ இப்படி ஆரம் பித்திருக்கிறாய்.”

“அப்படி ஒரு நாளும் நேராது.”

  • நேரத்தான் போகிறது.’
  • நேர்ந்தால் நானும் உங்களோடு வந்து விடுவேன்; என்னை ஏற்றுக்கொள்வீர்களா?’

“நிச்சயம் மாட்டேன்.” -இடியே தலைமேல் இறங்கி விட்டாற்போல் ஹரி நடுங்கியபடியே கூறினான்:

“ஆனால் அந்த நிலைமையை உனக்கு ஏற்படுத்து வதற்கு முன் நானே கீழே சென்று விடுகிறேன்’ என்று எழுந்தவனைக் காந்தாமணி மறித்தாள்.

-நில்லுங்கள். நானே போய் விடுகிறேன். அநாவசி யமாக எனக்காக நீங்கள் ஏன் கீழே போகவேண்டும்? பயப் படாமல் நிம்மதியாகத் துரங்குங்கள். அம்மா வர’ மாட்டாள்; ஏனென்றால் அவள் கீழே இல்லை?’ என்று கூறி, பதிலுக்குக்கூடக் காத்திராமல் விருட்டென்று செல்ல முயன்றவளை ஹரி தடுத்து நிறுத்தினான்.