பிறவிக் கடன் 395
‘என்ன தம்பி இது: இப்படி ஒரே முட்டாக் கோவிச்சுக்கறே? சுவாமிமலைக்கு முந்தாநா கிருத்திகைக் குப் போனேன்.”
அம்தல்லாம் வேறே இப்போ ஆரம்பித்திருக் கிறாயா? தேர்த்திருவிழா வருஷத்துக்கு ஒரு தடவை தானே வருகிறது; இது மாதம் ஒரு கும்பல் சேருகிற நாளாயிற்றே என்றா?’
என்ன தம்பி இது, பழைய பேச்சு?’
- நீ புதிதாகச் சொல்லு.’
தெரு வழியாப் போற போது உங்க ஐயா வூட்டிலே பெரிய பூட்டுத் தொங்கிக்கிட்டு இருந்திச்சு.’
எங்கேயாவது சிங்கப்பூருக்கோ, சிலோனுக்கோ புறப்பட்டுப் போய் விட்டோம்; மூவாயிரம் ரூபாய் போயிற்றே என்று பயந்து விட்டாயாக்கும்?’
என்ன தம்பி இன்னக்கிப் பேச்செல்லாம் ஒரே எடக் காவே பேசறே! பட்டணம் போயிருக்கிறதாச் சொன் னாங்க. நான் புறப்பட்டு வந்திட்டேன்.’
“தெருவில் போகிற உன்னைக் கூப்பிட்டு அவர்களாக நாங்கள் பட்டணம் போனதை உன்னிடம் கூறினார்: களாக்கும்?”
-இல்லே தம்பி, நான்தான் கேட்டேன்.’
- அதற்குத்தான் இவ்வளவும் கேட்டேன்.’ ‘தப்புன்னா மன்னிச்சுடு தம்பி.’
‘தப்பும் இல்லே, மன்னிப்புமில்லே: சும்மா தமா ஷ-க்குச் சொன்னேன் மாமா, நானே உன்னைத் தேடி