பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தாமணியின் கடிதம் 409

தட்டில், ஜரிகைப்பட்டு, பொன் பூ, பழத் துடன், ஐயாயிரம் ரூபாய் பணமும் இருந்தன. சுசீலா விழியசைக்க மறந்தாள்.

என்னைத் தெரிகிறதா?” என்று சுசீலாவிடம் கேட்டாள் காந்தாமணி.

தெரிகிறது'; என்று - தாயும், மகளுமாக அப்பா விடம் சிrை கற்றுக் கொள்ள தன் வீடு தேடி வந்த பழைய சம்ப்வத்தை நினைவு படுத்திக் கொண்டு சொன்ன வண்ணம்-தட்டை ஹரியிடம் கொடுத்துவிட்டு, காந்தா மணியின் குழந்தையைத் தன் இடுப்பில் ஏற்றிக் கொண்டாள் சுசீலா. அந்தக் குழந்தையைத் தீண்டிய போது, காந்தாமணி இப்போது யாருக்கோ மனைவி ஆகிவிட்டவள்; இவளைப் பற்றி எவ்வளவு தவறுதலாக எண்ணி விட்டோம்! என்ற கழிவிரக்கம் அவளுக்கு உண்டாயிற்று.

மைனரின் குழந்தைக்குப் பிறந்தநாள் பரிசாகத் தான் வாங்கி வந்திருந்த பொருளை சுசீலா, குழந்தையிடம் கொடுத்தாள். குழந்தை அதை காந்தாமணியிடம் நீட்டியது.

விசேஷ அழைப்பின் பேரில் வந்திருந்த பிரமுகர்கள் ஹரியின் பாட்டைக் கேட்டு பிரமித்துப் போயினர். அந்த இடத்திலேயே மைனர் மூலம் ஹரிக்கு பல பெரிய மனிதர்கள் வீட்டுத் திருமணக் கச்சேரிக்கு ஒப்பந்த மேற்பட்டது.

கச்சேரி முடிந்து திரும்பியபோது: ஹரியைப்

போலவே சுசீலாவின் உள்ளமும் குளிர்ந்திருந்தது.

விட்டுக்குள் நுழைந்ததும் அவள் பரபரவென்று பெட்4

பு, இ.-26