பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பூர்ணசந்திரோதயம்-1 கலீரென்று சங்கீதம் பாடி ஒலிக்க ஸோபாக்களின் மீதும் மேஜைகளின் மீதும் கட்டில்களின் மீதும் ஏறி ஏறி இறங்கிக் குயில் போன்ற குரலால் கணிர்கணிரென்று பேசிக் கலகலவென்று வாய்விட்டு நகைத்து அங்குமிங்கும் பாய்ந்து அவரை விடாமல் சூழ்ந்து அவரைப் பலவகையில் இன்பகரமாக வருத்திக் கொண்டிருந்தனர். இளவரசரது கை ஒரு சமயத்தில் ஒருத்தியின் பட்டுப் புடவையில் படும்; இன்னொரு சமயத்தில் ஒருத்தியின் முகத்தில் உராயும்; இன்னொரு சமயத்தில் அவர்களது இடை, முதுகு, தோள், மார்பு முதலிய பற்பல இடங்களில் போய்ப் படும். இன்னொரு சமயத்தில் அவரது கை, அவர்களது ஜடைப் பின்னலைப் பிடித்துக்கொள்ளும்; ஒவ்வொருத்தியும் அவரது கையில் பிடிபட்டவுடனே, அவர் ஆசையோடு அவளைக் கட்டி மார்போடு சேர்த்தனைத்து முத்தமிடுவார். அவள் உடனே தப்பித்துப் போய் விடுவாள். இம்மாதிரி அந்த மனோரம் மியமான கண்கட்டுவிளையாட்டு நெடுநேரம் நடந்தேறியது. இளவரசர் தமது கண்களைத் திறந்து கொண்டிருந்த காலத்தில் இன்பமாய்த் தோன்றாத அந்தப் பெண்பாவையரின் அங்கங்கள்கூட அப்போது பரமாநந்தத்தை கொடுத்துக்கொண்டிருந்தன. ஒருத்தியை இன்னாரென்று உணர்ந்து தொடுவதைவிட, அவள் இன்னாரென்பதை அறியாது தொடுவதில் பன்மடங்கு அதிக இன்பமுண்டென்பது இளவரசரது எண்ணமாகையால், அந்த விளையாட்டு இரண்டு மணிநேரம் வரையில் நடைபெற்றது. அதற்குமேல் இளவரசரது கண்கள் நோக ஆரம்பித்தமையால் அவர் தமது முகத்திலிருந்த கட்டைவிலக்கி அப்பால் விசிறி எறிந்துவிட்டு, "அப்பாடா! விளையாட்டு நல்ல விளையாட்டு' என்று கூறிய வண்ணம் ஒரு ஸோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டு அவர்களையெல்லாம் சந்தோஷமாகப் பார்த்து விலாபுடைக்கக் கலகலவென்று நகைக்க, அந்தப் பெண்பாவை யரும் அவரை நோக்கித் தங்களது அற்புதமான பல்வரிசை