பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பூர்ணசந்திரோதயம்-1 இவளுக்கும் தங்களுக்கும் இதுவரையில் பழக்கமாக வில்லையென்று நினைக்க வேண்டியிருக்கிறது; அப்படியிருக்க, தாங்கள் உள்ளே போய் விட்டு வந்ததிலிருந்து, தங்களுக்கு அவளிடத்தில் கொஞ்சம் ஆசை ஏற்பட்டிருப்பதாக நினைக்க வேண்டியிருக்கிறது. அவள் தங்களுக்கு என்ன மறுமொழி சொன்னாள்? க. மிட்டாதார்: அவள் பேசுவதைப் பார்த்தால் இந்த உலகத்துப் பெண் அல்ல போலவும் ஆகாயத்திலிருந்து இப்போதுதான் நேராகக் குதித்து வந்தவள் போலவும், மகா அலட்சியமாகப் பேசுகிறாள். அவளை எப்படியும் நான் என் வசப்படுத்துகிறேன் என்று சபதம் கூறிவிட்டு வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில்தான் நான் உன்னுடைய உதவியை நாடுகிறேன். உன்னுடைய சேனாதிபதி ராமன் எங்கே காணோம்? அவன்தான் என்னுடைய கருத்தை நிறைவேற்றத் தகுந்த மனிதன். பஞ் சன்னா: - ராமன் இதோ இந்த வாசற் படியின் பக்கத்திலே தான் நிற்கிறான். இந்த விஷயத்தில் ஆனாலும் சரி; இன்னும் வேறே எந்த விஷயத்தில் ஆனாலும் சரி, தங்களுக்கு எந்த விதமான உதவி தேவையானாலும், அதை நானும் ராமனுமாகச் சேர்ந்து முடித்து வைக்கிறோம். விஷயத்தைத் தெரிவிக்கலாம். க. மிட் டாதார்:- சரி; நிரம் பவும் சந்தோஷம். நீங்கள் இப்போது வேறொன்றும் செய்ய வேண்டாம். நீயாவது ராமனாவது அவளுடைய ஜாகைக்குப் பக்கத்தில் எங்கே யாவது மறைந்திருந்து அந்தப் பெண் என்ன செய்கிறாள் என்பதையும், எங்கெங்கே போகிறாள் என்பதையும், இந்த ஜாகைக்குள் யார் யார் வந்துவிட்டுப் போகிறார்கள் என்பதையும், இதற்குள் இருக்கும் வேலைக்காரர்கள் எங்கே போய் விட்டு வருகிறார்கள் என்பதையும் ஒன்றுவிடாமல் கவனித்து உடனுக்குடன் எனக்குச் சங்கதி சொல்லியனுப்ப