பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கள் 219 வீட்டில் வசிக்கவில்லை. சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்க முள்ள வீட்டில் இருக்கிறார்கள். அந்தப் புதிய மேல் விலா சத்துக்கே இனி நீகடிதம் எழுதவேண்டும். உங்களுடைய rேம சமாசாரத்தை அறிய நான் நிரம்பவும் ஆவல் கொண்டிருப்பதால் உன்னுடைய கடிதத்தை மறு தபாலிலேயே எதிர்பார்க்கிறேன். இப்படிக்கு பிரியமுள்ள அக்காள், கமலம். -என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிக்கவே ஷண்முக வடிவின் மனதில் சந்தோஷமும்துக்கமும் மாறிமாறிப் பொங்கி எழுந்தன. கண்கள் ஆனந்த பாஷ்பமும், துக்கக் கண்ணிரும் பொழிகின்றன. தனது அக்காள் திரும்பிவர, சில வாரங்கள் பிடிக்கும் என்ற செய்தி, மிகுந்த விசனத்தை யுண்டாக்க, அவள் கருதிப்போன காரியம் எளிதில் பலித்ததும் சோமசுந்தரம் பிள்ளையும் அவரது சம்சாரமும் நிரம்பவும் நல்ல மனிதர்கள் என்பதும் தங்கள் விஷயத்தில் மட்டுக்கடங்கா அபிமானம் உள்ளவர்கள் என்பதுமான செய்தி அளவுகடந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது. ஷண்முகவடிவு அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிப் படித்தவளாய், அவ்விடத்தை விட்டு மாளிகைக்குப் போய் அங்கே இருந்த வேலைக்காரியானமுத்தம்மாளை அழைத்து, அந்தக் கடிதத்தை அவளுக்குப் படித்துக் காட்டினாள். மனிதரது இளம் பிராயத்தில் அவர்களது மனம் இயற்கையிலேயே சந்தோஷமாக இருப்பதும், துக்கம் நீடித்து நிற்காமல் துரிதத்தில் மறைவதுமே மனித இயல்பு. ஆதலால், ஷண்முக வடிவு ஒருவாறு தேறுதலடைந்து, தனது அக்காளுக்கு அனுப்புவதற்கு ஒரு கடிதம் எழுதலானாள். அந்தக் கடிதம் மிக உருக்கமாகவும், சகோதரி வாஞ்சை நிரம்பப் பெற்றதாகவும், விரிவாக எழுதப்பெற்றதாகவும் இருந்தமையால், அவள் அதை எழுதி முடிக்க, பகல் ஒருமணி வரையில் பிடித்தது. அது எழுதி முடிவுற்ற உடனே அதை யார்