பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பூர்ணசந்திரோதயம்அதற்குப் பதிலாக தினம் தினம் உம்மைத் தன் வீட்டுக்கு எவ6 அழைத்துக் கொள்ளுகிறாளோ அவளைப் பார்த்து நீர் இந்த கிளியைக் கொடும் என்று அமர்த்தலாகப் பேசியவண்ணம் முறுக்காக அப்புறம் திரும்பி நடக்கலானாள். உடனே அந்த மனிதன் மிகவும் குறும்பாக அவளை விளித்து 'அம்மா ஏனம்மா இப்படி கோபித்துக்கொண்டு போகிறீர்களே நான் இப்போது என்ன தவறு செய்துவிட்டேன்? ஒன்றும் செய்யவில்லையே. இந்தக் கிளியைப் பார்த்து நீங்கள் ஆசைப்பட்டீர்கள். அந்தக் கிளியைத் தினம் தினம் பார்க்க நானும் ஆசைப்பட்டேன். இருவருடைய பிரியத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்குத் தகுந்த ஒரு யோசனையை நான் சொன்னேன். இதற்குள் இவ்வளவு ஆத்திரப்பட்டு என்மேல் கோபித்துக்கொண்டு பராமுகமாய்ப் போக ஆரம்பிக்கிறீர்களே இன்னம் நான் மகா முக்கியமான ஒரு ரகசிய சங்கதியை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அதைக் கேட்பீர்களானால், இவ்வளவு பிரியம் வைத்துள்ள அருமையான ஒரு மனிதனை நாம் இவ்வளவு ஆத்திரமாக இளக்காரம் செய்து விட்டோமே என்று விசனப்படுவீர்கள். உங்கள் விஷயத்தில் சில மனிதர் பலமான ஒரு சதியாலோசனை செய்துகொண்டிருக்கிறார்கள். அதை அறிந்து கொள்ளாமல் நீங்கள் இருப்பது அபாயகரமான விஷயம். அந்த விஷயத்திலும், உங்களுக்கு எவ்வித அபாயமும் நேராமல் காப்பதற்கு என்னுடைய உதவியும் உங்களுக்கு அவசியம் தேவையாக இருக்கும். தயவுசெய்து கொஞ்சம் நில்லுங்கள். போகலாம்' என்று கூறியவண்ணம் அவளுக்கு முன்பாக வந்து வழிமறிப்பது போலக் குறுக்காக நின்று கொண்டான். அதைக் கண்ட பூர்ணசந்திரோதயம் அருவருப்பினால் தனது முகத்தைச் சுளித்துக்கொண்டு அப்படியே அவனைப் பார்த்து, “என்ன ஐயா இது சண்டி வழக்கமாக இருக்கிறது! எனக்கு உம்முடைய கிளியும் வேண்டாம்; உம்முடைய ரகசியமும்