பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 - பூர்ணசந்திரோதயம்-1 சொல்லுகிறபடியே நான் இப்போதும் எச்சரிப்பாக நடந்து கொள்ள வேண்டுமென்று தான் இவ்விடத்தை விட்டுப் போகிறேன்' என்று மிகுந்த அருவருப்போடு கூறினாள். அந்த மனிதன் மிகவும் கெஞ்சலாகப் பேசத் தொடங்கி, 'ஏதேது! நீ மகா பொல்லாதவளாக இருக்கிறாயே! நான் பேச ஆரம்பிக்கும் போதே பழியை என் தலையிலேயே போட ஆரம்பிக்கிறாயே! நானோதக்க பெரிய மனிதன். இப்படிப்பட்ட சதியாலோசனையில் எல்லாம் நான் சேரக்கூடியவனல்ல. ஆனால், நான் இப்போது குறிப்பிடும் மனிதர்களுள் ஐந்தாறு பேர் ஒன்றாகச் சேர்ந்து உன்னைக் கைவசப்படுத்த வேண்டுமென்று உறுதி செய்து கொண்டு அதற்காக முப்பதினாயிரம் ரூபாய் பந்தயம் கட்டி இருக்கிறார்கள். அவர்கள் எனக்குச் சிநேகமான மனிதர்கள்தான். ஆனால், இதற்காக நான் அவர்களுடைய சிநேகத்தை விடமுடியவில்லை. இருந்தாலும் உன் விஷயத்தில் அவர்கள் செய்வது என்மனசுக்கு சரியாக இல்லை. ஆகையால், இதை நான்தான் உன்னிடத்தில் சொன்னவன் என்பதை நீ வெளியிடாமல் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்' என்றான். பூர்ணசந்திரோதயம், 'ஓகோ அப்படியா உம்முடைய சிநேகிதர்களா பந்தயம் வைத்திருக்கிறார்கள்? நல்ல காரியம் செய்தார்கள் அவர்கள் உம்முடைய ஆப் த சிநேகிதர்கள் என்கிறீர். அவர்களுடைய சிநேகத்தையும் தள்ளமுடிய வில்லை என்கிறீர். அப்படியானால், அவர்களுக்கு முன்னால், நீர் இந்த விஷயத்தை ஆமோதித்து அவர்களுக்குத் தெரியாமல் என்னிடத்தில் வந்து அவர்களைப் பற்றி துஷணையாகப் பேசுகிறீரென்பது நன்றாகத் தெரிகிறது. ஒருவேளை அந்தப் பந்தயம் வைத்திருப்பவர்களுள் நீரும் ஒருவராக இருந்தாலும் இருப்பீர். நான் உம்மை மெச்சிக்கொள்வேன் என்று நினைத்து நீர் யோக்கியர் போல நடித்து, அவர்களைப் பற்றித்துவுணையாகப் பேசுகிறீர் என்றும்