பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பூர்ணசந்திரோதயம்-1 அக்காள் தன்னைத் தனியாக விட்டுப் பிரிந்து நெடுந்துரத்தி லுள்ள ஊருக்குப் போவதைப் பற்றி பெருத்த திகிலும் சஞ்சலமும் எழுந்து அவளது மனத்தைக் கலக்கத் தொடங்கின. தன்னைவிட்டுத் தனது அக்காள் நெடுங்காலத்திற்குப் பிரிந்திருக்க நேர்ந்து விடுமோ வென்றும், அவளுக்குத் தஞ்சையில் ஏதேனும் துன்பம் சம்பவிக்குமோ வென்றும் நினைத்துக் கலங்கி ஷண்முகவடிவு கண்ணிர் விட்டுத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். தனது வலது கண்ணும் வலது பக்கமும் துடித்ததிலிருந்து பின்னால் ஏதேனும் தீங்கு சம்பவிப்பதற்கு அது அறிகுறியோ என்று அஞ்சி, மிகுந்த வேதனைக்குள்பட்டு நைந்துருகினாள். அவளது நிலைமை யைக் கண்ட கமலம் மிகுந்த விசனமும் சஞ்சலமும் அடைந்தவ ளாய் தனது தங்கையைத் தேற்றி, ஈசுவரனது அருளால் தங்களுக்கு எவ்விதத்துன்பமும் நேராதென்று உறுதி கூறி விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போய் வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். அவ்விடத்தில் நின்ற வேலைக்காரி கொடுத்த மூட்டையைக் கமலம் வாங்கிக் கொள்ள வண்டி அவ்விடத்தைவிட்டுப்புறப்பட்டது. அக்காளைவிட்டுப் பிரிந்த ஷண்முகவடிவு கரை கடந்த துயரமுற்றவளாய்க் கண்ணும் கண்ணிருமாக இருந்து தனது அக்காள் நல்ல செய்தியோடு rேமமாக அதி சீக்கிரத்தில் திரும்பி வரும்படி அதுக்கிரகிக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரிந்த சகலமான தெய்வங் களையும் வேண்டிக்கொண்டே இருந்தாள். தபால் வண்டிகள் விரைவாக ஒட ஆரம்பித்தன. திருவாரூரிலுள்ள தெருக்கள், கோயில், கமலாலயம், ஆறு, சோலைகள் முதலியவைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்னிட்டுத் தூரத்தில் போகப் போக கமலத்தின் மனதில் சகிக்கமுடியாத வேதனையும் துயரமும் பெருகி வதைக்கத் தொடங்கின. தான் பிறந்ததுமுதல் அதுவரையில் இருந்து பழகிய ரமணியமான இடத்தையும், தனக்கு நெருங்கிய அருமையான பந்துக்களையும் விட்டுத் தான் எங்கேயோ போக