பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 301 உன்னதமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெருத்த சாய்மான நாற்காலியைக் காட்டி அதன்மேல் உட்கார்ந்து கொள்ளும்படி உபசரிக்க, அந்தப் பெருமாட்டி, "நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள்' என்று நயமாகக் கூற, அவள் சிறிது தயங்கி ஒரு ஸோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டாள். அரண்மனையி லிருந்து வந்த பெருமாட்டி பூர்ணசந்திரோதயத்தால் காட்டப்பட்ட உன்னத ஆசனத்தில் அமர்ந்தாள். அப்படி அமர்ந்தவள் தனக்கு எதிரில் மிகவும் சமீபமாக உட்கார்ந்திருந்த பூர்ணசந்திரோதயத்தின் கட்டழகையும் அற்புத ஜோதியையும் கண்டு கரைகடந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து அவளை உற்றுநோக்கி, அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரையிலுள்ள ஒவ்வோர் அங்கத்தின் அற்புத சிருஷ்டியையும் கண்கொள்ளா அழகையும் ஏற இறங்கப்பார்த்து அப்படியே ஸ்தம்பித்து சிறிது நேரம் பேசாமல் மெளனம் சாதித்தாள். அவள்தனது வடிவத்தை மறைத்திருந்த அங்கியை விலக்கினால், அவள் எப்படிப்பட்ட அபூர்வமான அழகோடிருக்கிறாள் என்பதைத் தான் பார்க்கலாம் என்றும், அதன்பிறகு எப்போதாவது அவளது அடையாளத்தைத் தான் கண்டுகொள்ள அது அதுகூலமாக இருக்கும் என்றும் நினைத்து அவளது முகத்தைப் பார்க்க நிரம் பவும் ஆவல் கொண்டவளாக இருந்த பூர்ணசந்திரோதயம் நயமாக அவளோடு சம்பாவிக்கத் தொடங்கி, ‘என்னுடைய ஆயுட்காலத்தில் இன்றையதினந்தான் நல்ல சுபதினமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட பெரிய இடத்துபாயிலாயேப்பு களுடைய தரிசனம், என்னைப்போன்ற சாதாரண ஜனங்கள் தலைகீழாக நின்று தவம் செய்தாலும் கிடைக்கக் கூடியதல்ல. ஏதோ நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனே இன்றையதினம் பலிதமாகிறது போலிருக்கிறது” என்று பீடிகை போட்டுப்பேசத் தொடங்கினாள். அதைக் கேட்ட அந்தப் பெருமாட்டி மிகவும் நயமானகுரலில் பேசத் தொடங்கி, 'அம்மா! நான் வந்து உட்கார்ந்து உங்களை கிட்டத்தில் நெருங்கிப் பார்த்தவுடனே பரஸ்பரம் நானும்