பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 பூர்ணசந்திரோதயம்-1 துன்பங்களை யெல்லாம் நீங்கள் ஒரு நொடியில் மறந்து போகும் படியாக உங்களைச் சந்தோஷப்படுத்தி உங்களை உடனே அபார செல்வத்தில் வைத்து விடுவதாக உறுதி சொல்லும் படி என்னை அனுப்பினார் என்றாள். பூர்ணசந்திரோதயம், 'ஒகோ! அப்படியானால் சரிதான். என்ன இருந்தாலும் இவர்கள் அறுவரும் என் விஷயத்தில் பந்தயம் வைத்திருப்பதையும், ஒவ்வொருவரும் பகல் வேஷக்காரர் போல ஒவ்வொரு விதமாக என்னிடம் வந்து பிதற்றுவதையும் நினைக்க நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது. இப்படிப்பட்ட அபூர்வமான யோசனை இந்த உலகத்தில் வேறே எவருடைய புத்திக்கும் எட்டியே இருக்காது என்று நினைக்கிறேன். அதிருக்கட்டும். இப்போது நான் தாங்கள் சொல்வதற்கு இணங்கவில்லையென்று வைத்துக் கொள்வோம். அப்போது இளவரசர் மற்றவர்களைப் போல் ஏதாவது வேஷம் போட்டுக்கொண்டு என்னிடம் வருவாரோ?” என்றாள். அந்தப் பெருமாட்டி மகிழ்ச்சியோடு, 'அவர் மற்றவர்களைப் போல, அப்படியெல்லாம் உங்களுடைய மனசை வருத்தக் கூடியவர் அல்ல. இந்த விஷயத்தில் தானாகக் கணிவதே நிகரற்ற இன்பம் என்பது அவருடைய உறுதியான கொள்கை. ஆகையால், இப்போது நீங்கள் சம்மதிக்க வில்லையானால், அவரே உடனே வந்து உங்களை மறுபடியும் வற்புறுத்த மாட்டார். அவர் பலவகையில் உங்களுக்கு நன்மைகளைச் செய்து உங்களுடைய மனம் அவர் விஷயத்தில் இரங்கும்படி செய்ய முயற்சிப்பார். அப்படி இல்லாமல், மற்றவர்களைப் போல, இவர் உங்களுக்குத் தீங்கு செய்வதாகப் பயமுறுத்தக் கூடியவரும் அல்ல. உங்களுடைய மனம் எப்போதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்பதே அவருடைய எண்ணம் அன்றி, உங்களுடைய உடம்பில் ஒட்டிய ஒரு தூசிக்கும் தீங்கு செய்ய அவருக்கு மனம் வராது. இது சம்பந்தமாக உங்களுக்கு