வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 34.9 நான் இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பந்தயத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற மனிதர்களும் உங்களிடத்தில் கடும்மையல் கொண்டிருக் கிறார்கள். எப்பாடு பட்டாகிலும் அவர்கள் உங்களை அடைந்தே தீரவேண்டுமென்றுகங்கணங்கட்டிக் கொண்டிருக்கி றார்கள். அவர்கள்ஆள்கட்டு உள்ளவர்கள்; அவர்கள் மனம் வைத்தால், எப்படிப்பட்ட பாதுகாப்போடு இருக்கும் ஸ்திரி களையும் ஆள்களைவிட்டு அபகரித்துக் கொண்டு போய் விடுவார்கள். முக்கியமாக இந்த சூரக்கோட்டைப் பாளையக் காரர் பரம துஷ்ட மனிதர். அவர் எப்படியும் உங்களுக்குத் தீங்கு செய்து உங்களுடைய பெயரைக்கெடுத்துவிடவேண்டும் என்று உறுதி செய்து கொண்டிருக்கிறார். அவர் அதை எப்படியும் நிறைவேற்றியே தீருவார். அதோடு, நாளைய முறைக்காரராகிய கிழவர் இந்த ஊரிலேயே முதன்மையான பெரிய மனிதர். அவருக்கு அபாரமான செல்வமும், செல்வாக்கு முண்டு. இந்தப் பாளையக்காரர் எவ்வளவுக்கெவ்வளவு முரட்டுக் குணமுடைய வராக இருக்கிறாரோ, அதுபோல அந்தக் கிழவர் மகா பிடிவாத குணமுள்ளவர். அவர் ஒரு ஸ்திரீயின்மேல் மனசு வைப்பார். ஆனால், அதனால் அவருடைய சொத்து முழுதும் போவதா னாலும், அவருடைய உயிரே போவதானாலும், அவர் இலட்சியம் செய்யாமல், தம்முடைய எண்ணத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவார். நீங்களோ இந்த ஊரில் எவ்விதத் துணையும் இன்றி ஒரு மான்குட்டிபோல இத்தனை புலிகளினிடையில் மாட்டிக்கொண்டி ருக்கிறீர்கள். நீங்கள் இந்த ஊரை விட்டு, இவர்களுக்குத் தெரியாமல் வேறே எந்த ஊருக்காவது போனால் அன்றி இங்கேயே இருந்து இவர்களுடைய உபத்திரவத்திலிருந்து தப்ப முடியாது. பல மனிதர்கள் பலவிதத்தில் உங்களை அவமானப்படுத்த யத்தனிப்பார்கள். ஆனால், நீங்கள் இந்த இளவரசருக்கு உரியவர் ஆகிவிடும் பட்சத்தில், அந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதன்பிறகு எவரும் வந்து உங்களிடம்
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/335
Appearance