பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காள் 18 i இணங்க மாட்டீர்கள் என்றே நான் நம்புகிறேன். இந்த முப்பதினாயிரம் ரூபாய் இவருக்குக் கொடுக்கப்படுவதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இப்படிக் கொடுப்பதனால், என்னுடைய எஜமானியின் கற்பைப்பற்றி நீங்கள்.அவதூறு செய்வதாக அர்த்தமாகும். ஆகையால், எந்த முடிவையும் நன்றாக நிதானித்து ஆற அமரச் செய்யுங்கள்' என்று கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டான். உடனே ஜெமீந்தார் பாளையக்காரரை நோக்கி, "என்ன சொல்லுகிறீர்கள்?' என்றார். பாளையக்காரர் சடக் கென்று துடியாக எழுந்துநின்று, 'இவ்வளவு பெரிய விஷயத்தை நான் ருஜுவில்லாமல் தீர்மானம் செய்யும் படி கேட்டுக் கொள்வேனா? அப்படிச் சொன்னால், என்னைப் போன்ற முட்டாள், வேறே யாராவது இருப்பானா? நான் மாத்திரம் வெறும் பேச்சுப் பேசினால் அதை நீங்கள்தான் ஒப்புக் கொள்வீர்களா? ஒருநாளும் இல்லை. என்னிடத்தில் எழுத்து மூலமான ருஜு இருக்கிறது. அதைக் காட்டுகிறேன்; பாருங்கள். நான் முயற்சி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது புதன்கிழமை அல்லவா? அதற்கு முதல் நாள் நான் நம்முடைய ஹேமாபாயியைத் தற்செயலாகக் கண்டேன். அவள் ராணி வாய்க்கால் சந்தில் இருக்கிறாள் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம். அவளும் நானும் பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த காலத்தில், இந்தப் பூர்ணசந்திரோதயத்தைப் பற்றிய பிரஸ்தாபம் உண்டாயிற்று. அவளை எப்படியாவது என் வசப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நான் ஹேமாபாயியிடம் கேட்டுக் கொண்டேன். அவள் மறுநாளாகிய புதன்கிழமை அன்று சாயுங்காலம் பூர்ணசந்திரோதயம் வம்புலாம் சோலைக்கு வரும் போது தானும் அங்கே வந்து அவளிடம் பேசிக்கொண்டிருப்ப தாகவும், அந்தச் சமயத்தில் நானும் அங்கே வந்தால், என்னை அவளுக்குப் பழக்கம் செய்து வைத்து இரண்டொரு நாளில்