பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பூர்ணசந்திரோதயம்-3 களையும் எடுத்துக்கொடுத்து, "இதோ இதை நீயே எடுத்துக் கொண்டு போய், இந்த அம்மாளுடைய ஜாகையில் சேர்த்துவிடு. நான் முடிவாக இன்னொரு முறை அந்த அம்மாளிடத்தில் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு இந்தக் கூட்டத்தை இதோடு கலைக்கிறேன்” என்று கூறி முடித்தார். உடனே பூர்ணசந்தி ரோதயம் எழுந்து தனது விஷயத்தில் அவர்கள் எல்லோரும் செய்த நியாயமானதீர்மானத்தைக் குறித்தும், தனது விஷயத்தில் அவர்கள் காட்டிய மரியாதைக்கும் தனது ஆழ்ந்த நன்றியறித லையும் வணக்கத்தையும் வெளிப்படுத்தியபின் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் செல்ல, சாமளராவ், பஞ்சண்ணாராவ், ராமன் ஆகிய மூவரும் அவளைத் தொடர்ந்து பின்னால் சென்றனர். வாசலில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த வண்டியில் சாமளராவும் பூர்ணசந்திரோதயமும் ஏறிக்கொண்டு மற்ற இருவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இளவரசரது அரண்மனைக்கு வண்டியை ஒட்டிக்கொண்டு போகச் செய்தவர்களாய் மட்டுக்கடங்கா மகிழ்ச்சியோடு சம்பாஷிக்கத் தொடங்கினர். 29-வது அதிகாரம் ஜெகஜால வித்தை கோலாப்பூரில் கலியாணசுந்தரம் அடைபட்டிருந்த சிறைச்சாலை அறைக்குள் சுவரைக் குடைந்துகொண்டு வந்து சேர்ந்த இந்திராபாயி என்ற யெளவனப் பெண்பாவை தனக்கு மயக்கம் வருகிறது என்று கூறி அந்த வடிவழகனைப் பிடித்து இறுகக் கட்டியணைத்துக் கொள்ள, அவன் என்ன செய்வது என்பதை அறியாதவனாய் இரண்டொரு நிமிஷநேரம் ஒய்ந்து சும்மா நின்று விட்டான் என்று சொன்னோம் அல்லவா? அப்போது அந்த யெளவனப் புருஷனது மனம் பட்டபாடு சொல்லில் அடங்காததாக இருந்தது. அவனது மனதில்