பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223 கொள்ள அதுவே சரியான பக்குவகாலம் என்று எண்ணி, "என்னுடைய தலையில் இரத்தம் ஒழுகினால் ஒழுகட்டும். இன்னம் நீங்கள் என்னை எத்தனைதடவை வேண்டுமானாலும் கீழே தள்ளிவிட்டு என் தலை பல சுக்கல்களாக உடைந்து போகும்படி செய்தாலும், அதையும் நான் சந்தோஷமாகவே ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்கள் எனக்கு ஒரு நல்ல வார்த்தையாவது சொல்லி, என் மனம் திருப்தியடையும் படியான உறுதிமொழி சொல்லாத வரையில் நான் உங்களை விடப் போகிறதில்லை. நீங்கள் என்னை அடித்தாலும், குத்தினாலும், உதைத்தாலும், கீழேபோட்டுத் துகைத்தாலும், கத்தியை எடுத்துக்கொண்டு என்னை அணுவணுவாக வெட்டிச் சித்திரவதை செய்தாலும், நான் உங்கள் மேல் வைத்திருக்கும் பிரியமும், கொண்டிருக்கும் மோகமும் மாறப்போகிறதில்லை. நான் இதுவரையில் உங்களுக்குச் சுமார் ஆயிரம் முத்தம் கொடுத்திருப்பேன். அவைகளில் ஒன்றையாவது நீங்கள் பிரியத்தோடு எனக்குத் திருப்பிக் கொடுக்கக் கூடாதா? அப்படி நீங்கள் முத்தங் கொடுக்காவிட்டாலும் என் பிரியப்படி நடக்கிறேன் என்று அன்பான ஒரு வார்த்தை சொல்வீர்களானால், என் தலையின் புண்களும், உடம்பின் புண்களும், மனதின் புண்ணும் எல்லாம் ஒரே நொடியில் ஆறிப்போய் விடுவதன்றி, நானும் தேவாமிருத சாகரத்தில் மூழ்கினவள்போல ஆனந்த பரவசம் அடைவேனே. இவ்வளவு தூரம் என் மனசின் உறுதியைக் கண்டும் நீங்கள் இன்னமும் என்மேல் வர்மம் பாராட்டுகிறீர்களா? நான் இப்போது பிடிவாதம் செய்வது போல, இனி எப்போதுமே பிடிவாத குணமுடையவளாக இருப்பேனோ என்று ஒருவேளை நீங்கள் பயப்படுகிறீர்களா? அப்படிப்பட்ட சந்தேகமே உங்களுக்குத் தேவையில்லை. என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று நீங்கள்.தடுக்கிறீர்கள். ஆகையால், இந்த முக்கியமான விஷயத்தில் நான்அவசியம் பிடிவாத குணமுடையவளாக இருக்க வேண்டியிருக்கிறது. என்னை நீங்கள் உங்களுடைய அடியாளாக ஏற்றுக் L5-5.III-45