பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 - பூர்ணசந்திரோதயம்-3 இருக்கும் சிறைச்சாலையில் கூட இப்படிப்பட்ட காரியம் நிகழ்வதென்றால், அது இந்த மனிதருடைய ஜாதக விசேஷத்தைப் பொருத்தது என்று தான் எண்ண வேண்டி யிருக்கிறது. உங்களுடைய இன்ஸ்பெக்டர்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கக் கூடாதா? இந்தக் கலியான சுந்தரம்தான் பெண்கள் விஷயத்தில் பைத்தியம் பிடித்துக் கெட்டு அலைகிறாரே. அப்படியிருக்க, நெருப்புக்குப் பக்கத்தில் பஞ்சைக் கொண்டுபோய் வைப்பதுபோல, அவர் இருக்கும் அறைக்குப் பக்கத்தில்தானா அந்தத் தாசிப் பெண்ணை அடைத்து வைக்க வேண்டும்? அப்படி அடைத்து வைத்தால் தான் என்ன? சிறைச் சாலைக்குள் ஒருவரிடத்திலிருந்து இன்னொருவரிடம் துதுபோகும் அயோக்கிய மனிஷியைத் தானா வேலைக்காரியாக வைக்க வேண்டும் ? அப்படி வைத்தாலும், அந்த வேலைக்காரி கைதிகளோடு அதிகநேரம் பேசிக்கொண்டிருக்கும்படி விடலாமா? இந்தச் சம்பவத்தில் கலியாணசுந்தரம் செய்ததவறைக் காட்டிலும் உங்களுடைய கீழ் அதிகாரிகள் செய்ததே பெருத்த தவறாகத் தோன்றுகிறது’ என்றாள். - அதைக்கேட்ட போலீஸ் கமிஷனர் தமது பொறுமையை இழக்காமல் நிரம்பவும் நிதானமாகவே பேசத் தொடங்கி, 'வாஸ்தவந்தான்; அந்த வேலைக்காரி இந்தச் சிறைச்சாலையில் பதினைந்து வருஷகாலமாக இருந்து வருகிறாள். அவள் இதுவரையில் இப்படிப்பட்ட அயோக்கியத்தனம் எதுவும் செய்ததே இல்லை. இதுதான் முதல்தடவை. இந்த மனிதர் அவளுடைய மனசை எப்படியோ கலைத்துத் தைரியப்படுத்தி இருக்கிறார். இருக்கட்டும், எல்லாவற்றையும் நான் நன்றாக விசாரித்து அவரவர்களுக்குத் தக்கபடி சிட்சை நடத்தி வைக்கிறேன்' என்றார். அதற்குள் சிறைச்சாலையின் வாசல் வந்துவிட்டது. வண்டி அவ்விடத்தில் நின்றது. கமிஷனரும் ஸ்திரீகள் இருவரும்