பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2了本 பூர்ணசந்திரோதயம்-3 எழுதினேன். ஆகையால், இதன் முடிவைப் பார்த்துக் கொண்டு புறப்படலாம் என்றிருந்தேன். இப்போதுதான் காரியம் ஒரு மாதிரியாக முடிந்துபோய்விட்டது. இனி எனக்கும் இங்கே ஒரு வேலையும் இல்லை ஆகையால், நான் உடனே போய் போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பிரயாணத்துக்கு ஆயத்தமாகி வண்டியில் உட்கார்ந்துகொண்டு விடியற்காலம் இங்கே வந்து சேருகிறேன். நீங்களும் தயாராக இருங்கள். உடனே புறப்பட்டுப் போகலாம். உன்னுடைய வேலைக்காரி இன்னமும் பலஹlனமான நிலைமையில் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு நீ மாத்திரம் தனிவழி போனால், எல்லாப் பொறுப்பும் உனக்கே வந்துசேரும். மறுபடியும் பிரயாணம் செய்யும் பிரயாசையில், அவளுடைய உடம்பு கொஞ்சம் கெட்டுப் போகுமானால், உன்னுடைய பாடு மகா கஷ்டமாக முடியும். ஆகவே, எல்லாவற்றையும் யோசிக்க நானும் நாளைய தினமே புறப்பட்டு உன்னோடு கூடவருவதே உசிதமாகத் தோன்றுகிறது. எனக்கு இதனால் கஷ்டமாவது நஷ்டமாவது இல்லை. நானும் எப்படியும் ஊருக்குப் போகவேண்டியவளாக இருக்கிறேன். நான் தனியாக அவ்வளவு தூரம் பிரயாணம் செய்வதைவிட, உன்னோடு கூடவந்தால், எனக் கும் நீங்கள் துணையாக இருப்பீர்கள். நான் கூட இருப்பது உங்களுக்கும் தைரியமாக இருக்கும்' என்றாள். அந்தஸ்திரிசெய்த பிரரேபணையைக் கேட்டஷண்முகவடிவு நிரம்பவும் மனோதிடமும் மகிழ்ச்சியும் அடைந்து, 'உங்களுக்கு இந்த ஊரில் ஏதாவது முக்கியமான காரியம் இருக்குமானால், எனக்காக அதையெல்லாம் விட்டு வரவேண்டாம். மற்றபடி நீங்கள் என்னோடுகூட வருவதைப் பற்றி நான் அளவற்ற சந்தோஷம் அடைகிறேன். திக்கற்றவர்களுக்குத் தெய்வமே * துணையென்பது போல, அந்த ஈசுவரன் தான் உங்கள் மூலமாக எனக்கு உதவிசெய்கிறான் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.