பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 295 போய்விட்டு வந்தேன். அதனால் எனக்குக் கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது. நம்முடைய வீட்டில் சமையலும் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது சுமார்ஆறரை மணிசமயம் இருக்கலாம். ஏழு அல்லது ஏழரைக்கு நம்முடைய சாப்பாட்டை முடித்துக்கொண்டு எட்டுமணிக்கு முன்னாகவே புறப்பட்டு அங்கேபோய் ச் சேர்ந்துவிடுவோம். இதே வண்டியில் உட்கார்ந்துகொண்டு அங்கே போகலாம். நானும் உன்னோடு கூடவே வந்து உனக்கும் உன் அக்காளுக்கும் சந்திப்புச் செய்து வைத்துவிட்டு, கொஞ்ச நேரமிருந்து வண்டியில் உட்கார்ந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுகிறேன். நீ உங்களுடைய ஜாகைக்குப் போனால், அதன்பிறகு எங்களுடைய வீட்டுச் சாப்பாட்டுக்கு வரவா போகிறாய்; அது இல்லை ஆகையால், இந்த ராத்திரி போஜனத்தையாவது நீ இவ்விடத்தில் முடித்துக்கொண்டு தான் போகவேண்டும் ' என்று அளவற்ற அன்போடு வற்புறுத்திக் கூறினாள். தனது அக்காளை அப்போதே காணவேண்டும் என்று ஆவலும் பிரேமையும் ஷண்முக வடிவினது மனதில் மும்முரமாக எழுந்து அவளைத் தூண்டியது. ஆனாலும், கைம்மாறு கருதாமல் தனக்கு எத்தனையோ பெரிய உதவிகளை எல்லாம் செய்துள்ள உபகாரியின் மனம் வருந்தும்படியாகத் தான் நடந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணங்கொண்டவளாய் அந்த இள நங்கை அம்மணி பாயினது விருப்பத்தின்படி நடப்பதாக ஒப்புக் கொண்டாள். & அவ்வாறு தனது வேண்டுகோளுக்கு இணங்க ஷண்முக வடிவு இராப்போஜனத்தை அவ்விடத்திலேயே முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டதைப்பற்றி நிரம்பவும் களிகொண்ட வள்போல நடித்த அம்மணிபாயி அவளது நற்குணத்தைப்பற்றி மிகவும் புகழ்ச்சியாகப் பேசி முகஸ்துதி செய்து, தனது சதியாலோசனையைப் பற்றி அவள் சிறிதும் சந்தேகியாதபடி நிரம்பவும் தந்திரமாக நடந்து கொண்டாள்.