உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பூர்ணசந்திரோதயம்-3 அதை மீளாத துயரத்தில் ஆழ்த்திப் புண்படுத்தி விட்டீர்கள்; இந்த உலகத்தில் நான் இந்த ஜென்மத்தில் சந்தோஷமாக இருப்பேன் என்ற நம்பிக்கையே போய் விடும் படி என் விஷயத்தில் பெருத்த சதி செய்து விட்டீர்கள். என் மனசிலிருந்த பழைய எண்ணங்களை எல்லாம் போக்கடித்துப் புது மாதிரியான எண்ணங்களை எல்லாம் உண்டாக்கிவிட்டீர்கள். ஒரு பெருத்த ராஜ்யத்தின் பட்டமகிஷியான லலிதகுமாரி தேவியினிடத்தில் முக்கியப் பணிப்பெண்ணாக இருக்கப் போகிறோம் என்று நான் பெருமை பாராட்டி அதை மனதில் பாவித்து மானசீகக் கோட்டை கட்டியிருந்ததை எல்லாம் ஒரு நிமிஷத்தில் நீங்கள் இடித்துத் தகர்த்தெறிந்துவிட்டு அதற்குப் பதிலாக உங்களுடைய இன்ப வடிவத்தை என் மனசில் சதாகாலமும் கொலுவீற்றிருக்கச் செய்து விட்டீர்கள். நான் சொல்வதைக் கேட்டு ஏன் அப்படித் திடுக்கிட்டு என்னை வெறித்துப் பார்க்கிறீர்கள்? உங்கள் விஷயத்தில் சொப்பனத்தில் கூட எள்ளளவேனும் அபகாரம் செய்தறியாத இந்த அடிமை யின் மேல் நீங்கள் ஏன் கோபம் கொள்ளுகிறீர்கள்? நான் சொல்வது முழுதையும் நீங்கள் பொறுமையோடு கேட்டுத்தான் ஆகவேண்டும். என்னுடைய மனசின் பாதைகளையும் உடம்பின் அவஸ்தைகளையும் நான் ஒரு நொடி நேரம் பொறுப்பதுகூட அசாத்தியமானதாக இருக்கிறது. உங்களைக் கண்ட முதல் என் அறிவு கலங்கி அடியோடு குழம்பிப் போய்விட்டது. ஆகையால், அது முதல் நான் பைத்தியம் கொண்டவள் போல இருந்து சகிக்கமுடியாத சங்கடங்களுக்கு ஆளாகிவருகிறேன். இப்படிப்பட்ட அழகு வழிந்த மன்மத ரூபத்தையும், உத்தம குணங்களையும் கண்டு யார்தான் சித்தப்பிரமை அடையாமல் மிஞ்சுவார்கள்?' என்று நிரம்பவும் நைந்து, பாகோ, தேனோ, அமிர்தமோவென மொழிந்தாள். மகா விந்தையான அவளது சொற்களைக் கேட்ட கலியாண ஈந்தரம் முற்றிலும் பிரமிப்பும் கலக்கமும் அடைந்தவனாய்