பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பூர்ணசந்திரோதயம்-3 நினைத்து அநாவசியமானதுக்கத்தையும் மனோவிகாரத்தையும் விலைக்கு வாங்கிக்கொண்டு சங்கடப்படுகிறாய். அந்த நிலைமையில் நான் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தி .சங்கடத்தை அதிகப்படுத்துவது சரியல்ல لنا ساكاة رقي منه سنة அதுவுமன்றி நான் இனி சாப்பிடும்போதாவது, மற்ற சமயத்தி லாவது, உங்களுடைய கண்ணில் படப் போகிறதில்லை. நீங்கள் யாரும் இனி என்னுடைய விடுதிக்கு வர வேண்டாம். எனக்கு ஆகவேண்டிய விஷயங்களை இனி நானே பார்த்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கும் எனக்கும் இதுவரையில் இருந்து வந்த சம்பந்தமெல்லாம் இன்றோடு தீர்ந்துபோய்விட்டதாக நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டும். நீ இந்த விஷயத்தை உன்னுடைய அக்காளிடமும் சின்னம்மாளிடமும் சொல்லி, அவர்களையும் எச்சரித்து வை. லலிதகுமாரி தேவியினிடம் வேலையிலிருக்கும் விஷயமாக உன் அக்காள் எனக்குத் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்த விஷயத்தில் எனக்கு ஏதாவது சங்கதி தெரிவிக்க வேண்டுமானால், அதை ஒரு கடிதத்தில் எழுதி இன்று ராத்திரிக்குள் எனக்கு அனுப்பி விடுங்கள். நான் நாளையதினம் காலையில் தனியாகவே பிரயாணம் புறப்பட்டுப் பூனாவுக்குப் போகத் தீர்மானித்து விட்டேன். அதற்குள் நீங்கள் எவ்வித முடிவையும் தெரிவிக்காவிட்டால், நான் போய் லலிதகுமாரி தேவியை எச்சரித்து நீங்கள் அவள் விஷயத்தில் எவ்வித மோசமும் செய்யாமல் விழிப்பாக இருந்து பார்த்துக் கொள்ளும்படி செய்துவிட்டு நான் ஊருக்குத் திரும்பப் போகிறேன். நான் சொன்னதை எல்லாம் கவனித்துக் கேட்டுக் கொண்டாயல்லவா? சரி; நீ போ; நான் பின்னால் வருகிறேன். மனிதர்கள் பார்க்கிறார்கள்' என்று கூறிவிட்டு சிறிதுதுரம் நடந்து அப்பால் போய்விட்டான். அவன் சொன்ன எதிர்பாராத வார்த்தைகளெல்லாம் மகா கூர்மையான ஈட்டிகள்போல அவளது செவிகளில் சுருக்கு சுருக்கென்று குத்தின. இருந்தாலும் நடுத்தெருவில்,