பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பூர்ணசந்திரோதயம் - 4 அடைபட்டிருக்கிறார்கள். சுமார் பதினைந்து வயசு முதல் ஐம்பது வயக வரையில் அடைந்துள்ளவர்களான அந்த ஸ்திரீகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பைத்தியம் பிடித்திருக்கிறது. ஆண்பிள்ளைகளைப் பார்க்கும் போதே அவர்களுள் சிலருக்கு ரெளத்திராகாரமான கோபம் பிறந்து விடும்; அவர்கள் அந்த ஆண்பிள்ளைகளின் மேல் பாய்ந்து பலவகையில் அடித்து வதைத்துக் கடித்து உபத்திரவிப் பார்கள். வேறு சிலருக்கு ஆண்பிள்ளைகளின் மேல் ஏற்பட்ட மகா அமிதமான பிரேமையினாலும் மோகாவேசத்தினாலும் கட்டுக் கடங்காத கொடிய பைத்தியமும் மதமும் பிடித்திருக்கின்றன. அவர்கள் உம்மைப் போன்ற ஆண்பிள்ளைகளைக் கண்டு விட்டால், கரும்பைக் கசக்கிச்சாறுபிழியும் ஆலையைப் போல உம்மை உயிரோடு சித்திரவதை செய்து உம்முடைய மனசுக்கு விரோதமான காரியங்களை எல்லாம் செய்துவிடுவார்கள். இவ்விதமான பைத்தியங் கொண்டிருப்ப வர்கள் முக்கியமாக கிழவிகளாகவே இருக்கிறார்கள். இன்னும் பலர் எந்தப் புருஷனைக் கண்டாலும், தங்களுடைய பிள்ளையென்று பாவித்துக் கட்டிக்கொள்ள வருகிறார்கள்; சிலர் புருஷன் என்று கட்டிக் கொள்ள வருகிறார்கள். வேறுசிலர் பகைவன் என்று வதைக்க வருகிறார்கள். அப்படிப்பட்ட மகா பயங்கரமான பெரிய பைத்தியக்காரிகளின் கும்பலில் நாங்கள் உம்மைக் கொண்டுபோய் விட்டுவிடப் போகிறதன்றி, அவர்களால் உம்முடைய உயிருக்கு எவ்வித ஹானியும் நேராமல் பார்த்துக் கொள்ளும் படி, சுய உணர்வோடு இருக்கும் சில காவல்காரிகளை நியமிக்கப் போகிறோம். நீர் எப்போதும் உயிரோடும் சுய உணர்வோடும் இருந்து, இரவு பகல் சதா காலமும் அத்தனை பைத்தியக்காரிகளும் செய்யும் சேஷ்டை களை அனுபவித்துக் கொண்டு அவ்விடத்தில் என்றும் சிரஞ்சீவி யாக இருக்கலாம். ஏனென்றால், உமக்கும் ஸ்திரீகளைப் பலாத்காரம் செய்வதில் ஆசை அதிகம். ஆகவே உம்முடைய மனசுக்குப் பிடித்த இடமாகப் பார்த்து உமக்கு ஏற்படுத்தி