பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பூர்ணசந்திரோதயம் - 4 தந்திரங்கள் செய்ய உத்தேசித் திருப்பதோடு அதற்கு அனுசரணையாக இந்த ஊர் அரண்மனை வைத் தியரான மன்னாஜிராவ் என்பவரையும், மருத்துவச்சி யான ஸோனம் மாபாயி என்பவளையும் வசப்படுத்தித் தயாராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். லலிதகுமாரிதேவி இரண்டு வருஷகாலமாகத் தங்களுடைய முகத்தையே பார்க்காதிருந்தாள் என்பது உண்மையாக இருக்குமானால், இப்போது அவர்களுடைய கர்ப்பத்திலிருப்பது அன்னிய புருஷ சம்பந்தத்தினால் ஏற்பட்ட குழந்தை என்பது எல்லோருக்கும் எளிதில் தெரியக் கூடிய விஷயம். இந்த மர்மத்தின் உண்மை இன்னதென்பது எங்களைக்காட்டிலும் தங்களுக்கேசந்தேகமறத் தெரியும். ஆதலால், இதைக் கொண்டு தங்கள் பட்டமகிஷியின் தேக பரிசுத்தம் எவ்வளவு என்பதைத் தாங்களே கண்டு கொள்ளலாம்.

4. அவர்கள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் ஒருபுறமிருக்க, அவர்கள் தஞ்சையை விட்டு இந்த ஊருக்கு வந்த பிறகு எப்போதும் அந்தப் புருஷரோடு கூடவே சுயேச்சையாகவும் குதுகலமாகவும் இருந்து பிறருக்கு அஞ்சாமல் வெட்கத்தை விட்டு நடந்து வருகிறது பட்டப்பகல் போல எல்லோருக்கும் தெரிந்துபோய் விட்டது. அவர்கள் நோய் கொண்டிருக்கும் தமது தகப்பனாரைப் பார்த்து அவர்க்குரிய காரியங்களைச் செய்ய வந்தவராகவே தோன்றவில்லை. தாமும் தமது ஆசைநாயகரும் எவ்வித ஆதங்கமும் இன்றி சுயேச்சையாக இருப்பதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து அந்தக் கருத்தை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த ஊருக்கு வந்தார்கள் என்றே எண்ணவேண்டி இருக்கிறது. அதோடு தஞ்சையிலிருந்தால் தாம் கர்ப்பிணியாக இருப்பது தங்களுக்கும் மற்றவருக்கும் வெளியாகி விடுமென்ற பயத்தினால், ஏதோ ஒரு சாக்கை வைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு இங்கே ஓடிவந்து விட்டார்கள் என்றும் நாம் யூகித்துக் கொள்ள வேண்டியி