பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 181

ருக்கிறது. இவ்வளவு விரிவாக நான் சொல்வதிலிருந்து, எல்லாம் உண்மையான சங்கதியென்று தங்கள் மனசில் பட்டிருக்கும். ஆனால், இந்தக் கடிதத்தையே நம்பித் தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தக்கடிதம் கண்ட தrணமே தாங்கள் புறப்பட்டு இந்த ஊருக்கு வரவேண்டும்; வந்து மறைவாக இருந்துகொண்டு பட்டமகிஷி யின் நடவடிக்கைகளையும், அவர்களோடு இருக்கும் புதிய தாதிகளின் நடவடிக்கைகளையும், அரண்மனை வைத்தியர் மருத்துவச்சி முதலியோரின் நடவடிக்கைகளையும் ரகசியத்தில் கவனித்துக் கொண்டிருந்தால், உண்மையெல்லாம் தானாகவே விளங்கிப் போம். ஆனால், தாங்கள் இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்பது இங்குள்ள எவருக்கும் தெரியவே கூடாது.தஞ்சையிலிருந்து வந்துள்ள புதியதாதிகளும், இந்த ஊர் அரண்மனை வைத்தியர், மருத்துவச்சி முதலிய எல்லோரும் லலிதகுமாரி தேவியிடமிருந்து ஏராளமாக லஞ்சம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்களிடம் தாங்கள் விசாரித்து உண்மையை அறிவது அரிதினும் அரிது. ஆனால், தாங்கள் அவர்களிடம் நயமாகவும் தந்திரமாகவும் நடந்து பெரும் பொருள் கொடுத்து முயற்சித்தால் உண்மையை ஒருவாறு கிரகிக்கலாம். ஆகையால், தாங்கள் நிரம் பவும் அவசரமாகப் புறப் பட்டு இங்கே வந்து எச்சரிப்பாகவும் தந்திரமாகவும் நடந்து கொள்ளுங்கள்.

5. நான் கூடித்திரிய குலத்தில் உதித்தவன்; பிராணனை விட மானமே பெரிதாக மதிக்கிறவன். மனிதர் செய்யும் மற்ற எந்தக் குற்றத்தைக் கண்டும் என் மனம் கொஞ்சம் பொறுத்தாலும் பொறுக்கும். ஆனால், ஸ்திரீகள் தங்களுடைய சொந்தப் புருஷரைவஞ்சித்து அன்னிய புருஷரைஅணையும் குற்றத்தைக் கண்டு நான் பொறுப்பது அசாத்தியமான விஷயம். இந்த லலிதகுமாரிதேவி செய்வதுபோல,என்னுடைய சொந்த மனைவி செய்திருப்பாளானால், நான் இந்நேரம் அவளுடைய