பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277 ஒன்றுதான் இந்த உலகத்தில் எனக்கு இன்பகரமாகவும் பற்றுக் கோடாகவும் இருந்து வருகிறது. இப்போது நான் படும் விசனமெல்லாம் எதைப் பற்றி என்றால், அதையும் நான் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். நீயும் நானும் சுமார் ஒரு வருஷகாலமாகப் பழகி எவ்வளவோ சந்தோஷமாக இருந்து வந்தோம். மகா துர்ப்பாக்கியவதியான எனக்கு அந்த சந்தோஷமும் நிலைத்து நிற்கக் கூடாதென்று இந்தப் பாழும் சிசுவொன்று வந்து குறுக்கிட்டிருக்கிறது. மாசம் ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. பிரசவம் இன்றைக்கோநாளைக்கோஎன்று நினைக்கும் படியாக இருக்கிறது. நான் சாதாரணமாகக் கெர்ப்பவதி ஆகியிருந்தால், எனக்கு எத்தனையோவைபவங்கள் நடக்கும். எத்தனையோ வைத்திய ஏற்பாடுகளும் மருந்துகளும் தயாராகும். இப்போது நானோ, இதை அடியோடு மறைத்து எல்லா விஷயங்களையும் திருட்டுத்தனமாக நடத்த வேண்டியிருக்கிறது. இதற்காக நான் தஞ்சாவூரிலிருந்து வரவழைத்திருக்கும் தாதிகள் இல்லாவிட்டால் இந்நேரம் என்னுடைய மானமும் போயிருக்கும், பிராணனும் போயிருக்கும். நான் போன இடத்தில் புல்லும் முளைத்துப் போயிருக்கும். அவர்கள் என் விஷயத்தில் உண்மையான பட்சமும், வாஞ்சையும் உடையவர்களாக இருப்பதால், இதற்காக அவர்களே சகலமான ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்து வருகிறார்கள். இப்போது என் மனசில் முக்கியமாக உண்டாகும் கவலை என்ன வென்றால், என் வயிற்றிலிருந்து பிறக்கும் குழந்தையை நான் வைத்து வளர்த்து அதைப் பார்த்து ஆனந்தமடையாமல், அது பிறந்தமுதலே அதை அன்னியரிடம் விட்டு நான் வந்து விட வேண்டுமே என்ற விசனமும், அதன் பிறகு அதை நான் பார்க்கமுடியுமோ முடியாதோ என்ற விசனமுமே என்னை இராப்பகலாய் வதைத்துக் கொண்டி ருக்கின்றன. இப்போது உன்னைப் பார்த்த உடனே அதே விசனந்தான் உண்டாகி என் மனதைக் கலக்குகிறது. என்ன செய்கிறதென்பது தெரியவில்லை.