பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299 உணர்ச்சிகளும் கட்டுக்கடங்காத பெரும் பேய்களாக இருந்தன. அற்புதமான அழகும், யெளவனப் பருவமும், மனமோகன வசீகரச் சாயலும் வாய்ந்த லீலாவதியை அருகில் நெருங்கிப் பார்க்கப் பார்க்க, அந்த விலங்கினது மூர்க்கமும், பேராசையும் நூறு மடங்கு அபாரமாகப் பெருகின. அதற்குமுன் அவன் மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையில் ரதிகேளி விலாசத்தி லிருந்த காமாந்தகாரப் படங்களையும் பொருட்களையும் பார்த்து, ஜெமீந்தார் ஷண்முகவடிவினிடம் கூறிய வார்த்தை களைக் கேட்டதனால், அவன் மகா விபரீதமான நிலைமையில் இருந்தவன் ஆதலால், அவள் தன்னிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்ற உணர்வினால்தூண்டப்பட்டவனாய், அவன் அன்றையதினம் எப்படியும் லீலாவதியைத் தனது வசப்படுத்தியே தீரவேண்டும் என்ற உறுதியோடு வந்தவன் ஆதலால், அவள் தன்னை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்ட வார்த்தைகள், அவனது மனதில் சிறிதும் உறைக்கவில்லை; அவளது விஷயத்தில் சிறிதும் இரக்கம் தோன்ற வில்லை. அவன் அவளிடம் அளவற்ற காதலும் மகிழ்ச்சியும் கொண்டவனாய் ஏளனமாகப் புன்னகை செய்து, ‘ஒ'கோ’ உன்னை நான் உடனே உங்களுடைய மாளிகையில் கொண்டுபோய் விடுவதற்காகத்தான் இவ்வளவு தூரம் சுமந்து வந்தேன் என்று பார்த்துக் கொண்டாயா? நல்ல காரியம் செய்தாய்! உங்களுடைய மாளிகையில் இனி என்ன இருக்கிறது? அங்கே இருந்த பணங்கள் நகைகள் ஆகிய முக்கியமானவைகள் எல்லாம் நான் இங்கேயே கொண்டுவந்துவிட்டேனே! நீ அங்கே போய் என்ன செய்ய எண்ணுகிறாயோ அதை இங்கேயே செய்கிறதுதானே. இந்தத் திரவியத்தை எல்லாம் நான் உன்னுடைய வசத்திலேயே ஒப்புவித்து விடுகிறேன். உங்கள் வீட்டில் நீ எவ்விதமான சுகங்களை அனுபவிப் பாயோ அவைகளைவிடப் பன்மடங்கு அதிகமாகவே இவ்விடத்தில் நீ அனுபவித்துக்கொண்டு சந்தோஷமாக இரு. அங்கே நீ உன் பெரிய தகப்பனாருக்கு அடங்கி, அவருடைய தயவை