பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பூர்ணசந்திரோதயம்-5 குனிந்து மாறி மாறி இரண்டு பக்கங்களாலும் பாய் மூட்டையின் உட்புறத்தைப் பார்த்தாள்.

அப்போது ஷண்முகவடிவின் கால் விரல் அசைந்ததாகத் தோன்றியது. ‘ஹா!’ என்று அவள் வாயால் மூச்சுவிட்ட ஒசையும் கேட்டது. அந்த ஒசை வேலைக்காரி, ஹேமாபாயி ஆகிய இருவரது செவியிலும் நன்றாகப் பட்டது. உடனே ஹேமாபாயி, ‘அடி கண்ணம்மா இதில் இருப்பவருக்கு இன்னும் உயிர் இருக்கிறமாதிரி தோன்றுகிறதே! இது ஆணோ பெண்ணோ என்பதுகூடத் தெரியவில்லையே! என்ன வந்தாலும் வரட்டும். நாம் இனிசும்மாபார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல. இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிடு. உள்ளே இருப்பவர் ஒருவேளை பிழைத்துக் கொள்ளக்கூடும்” என்றாள்.

உடனே வேலைக்காரி அந்த மூட்டையைத் துக்கி நடைத் திண்ணையில் மறைவாக வைத்துக் கொண்டு அதன்மேல் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்தாள். உள்ளே யிருந்த மனிதரது காலின் நிலைமையிலிருந்து அவரது முதுகுப் பக்கம் கீழே இருக்கும்படி மூட்டையை வைத்து அதை மெதுவாகத் தூக்கிக் கொடுத்தபடி, பாயை விலக்கினாள். அப்போது ஹேமாபாயி, வேலைக்காரி ஆகிய இருவரது மனமும் விவரிக்க அரிய அபாரமான ஆவலும் கிலியும் கொண்டு தடதடவென்று நின்றது. அவர்களது கைகால்களெல்லாம் வெட வெட வென்று ஆடின. உடம்பு முழுதும் வியர்த்து நீர் வெள்ளமாக ஓடியது. பாய் முழுதும் விலக்கப்பட்டவுடனே உட்புறத்தில் கண் கொள்ளா அழகோடு திவ்ய தேஜோமயமாக விளங்கிய ஒரு யெளவனப் பெண் இருந்ததைக்கண்ட அந்தப் பெண்டீர் இருவரும் திக் பிரமை கொண்டு திகைத்து ஸ்தம்பித்து நின்றுவிட்டனர். சொகுசானகளைதவழ்ந்த முகத்தோடு இருந்த நமது ஷண்முகவடிவைப் பார்த்த ஹேமாபாயி, “ஆகா! நான் இதுவரையில் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு அபாரமான அழகு வாய்ந்தவளை நான் பார்த்ததே