சேரி விளையாட்டு
23
வளர்ந்து, வறுமையிலே நலியும் அவர்களுக்கு விளையாடு வதற்கு என்ன நல்ல விளையாட்டுக் கருவிகள் கிடைக்கப் போகின்றன? அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களே நான் கண்டபடியே எழுதியிருக்கிறேன்; பாருங்கள் :
பனங்கொட்டை ஒருநான்கு
பாதையிலே கண்டெடுத்த
கனங்கெட்ட லாடமொன்று,
கண்ணாடித் துண்டிரண்டு,
ஓடையிலே போயெடுத்த
உருண்டைக்கல் லிருமூன்று
ஒடொன்று கூழ்காய்ச்ச---
ஒருகுடும்பம் செய்கின்றார்!
விளையாடுவதற்குத்தான் நல்ல நல்ல பொருள்கள் இல்லாவிட்டாலும், கற்பனையிலாவது அவர்கள் பற்பல இன்பங்களை உண்டாக்கி மகிழ்ச்சி அடைகின்றார்களா ? குழந்தையின் கற்பனைத் திறன் மிகப் பெரிதென்று சொல் கிறார்களே! ஒரு குச்சியையும் ஒப்பற்ற மிடுக்கு வாய்ந்த குதிரையாகக் கற்பனை செய்துகொண்டு சிறுவர்கள் அதில் சவாரி செய்வார்களே; ஆதலால் அவர்கள் உள்ளத்திலாவது இன்பங்களை யெல்லாம் கற்பனை செய்து மகிழ்கின்றார்களா?
பச்சை மனம் கட்டிவைத்த
பைஞ்சோலை சூழ்மாடம்
இச்சையெலாம் ஏவு முன்னர்
இனிதுசெய்யும் ஏந்திழைகள்
சிங்தைகவர் ஒவியங்கள்
செயல்மிக்க சிற்பங்கள;
கந்தங் கமழுகின்ற
காமன்மகிழ் பள்ளியறை: