பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பூவின் சிரிப்பு


பச்சை மனங் கட்டிவைத்த
பைஞ்சோலை சூழ்மாடம்;
இச்சையொல்லாம் ஏவு முன்னர்
இனிது செயும் ஏந்திழைகள்;

சிந்தை கவர் ஓவியங்கள்;
செயல் மிக்க சிற்பங்கள்;
கந்தங் கமழுகின்ற
காமன் மகிழ் பள்ளியறை;

நளபாகத் தறுசுவையில்
நல்ல நல்ல உண்டிவகை;
அளகா புரியது போல்
அளவற்ற செல்வங்கள்;

காலுக்குச் சோடு; நல்ல
காசி நகர்ப் பட்டுடைகள்;
மேலுக்குப் பொன்னணிகள்;
விதவிதமாய்ச் சுண்ணங்கள்;

இவை யெல்லாம் கற்பனைசெய்
தின்பமிகப் பெறுவாரோ ?
இவை யணைத்தும் கற்பிக்க
எவ்வா றறிந்திடுவார் ?

கனவுலகிற் காண்பதற்கும்
கருத்திலவை வேணுமன்றோ ?
மனக் கோட்டை கட்டுதற்கும்
வகையறியா ஏழ்மையினர் !

இடிந்த சுவர் விழுகூரை
எறும்புவனை பழங் கஞ்சி
மடிந்த வால் பன்றியலால்
மற்றென்ன கண்டுள்ளார் ?