எதிர்கால மன்னர்கள்
கள் இருக்கும் இடம் தெய்வம் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். இந்த நடமாடும் தெய்வங்கள் அறிவாளிகளாகப் போகும் தெய்வங்கள் இருக்கும் பள்ளிக்கூடங்கள் அழகாக இருக்கட்டும். அங்கே அன்பு தவழட்டும். அப்போதுதான் நீங்கள் படும் பாட்டுக்குப் பலன் உண்டு.
எல்லாக் குழந்தைகளும் தேற முடியும். அது நம் கையில் இருக்கிறது. அதற்கு முதல் வேலையாக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இரண்டாவது அவர்களுக்குப் படிப்பு வராது என்று சொல்லக்கூடாது. துணிவு கொடுக்கவேண்டும். இங்கிலாந்திலே அறுபது எழுபது பள்ளிகளுக்குச் சென்று பார்த்தேன். சிறு பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிகள்வரை பார்த்தேன். வெகுளி கொள்ளும் ஓர் ஆசிரியரைக்கூடக் காணமுடியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியராக நம்மாலும் இருக்கமுடியும். அன்போடு தட்டிக் கொடுத்து, அணைத்துத்தான் திருத்தமுடியுமே தவிர, அடித்துத் திருத்தவே முடியாது. ஆகவே குழந்தைகளை அணைத்து உற்சாகப்படுத்தித் திருத்துங்கள்.
இங்கிலாந்திலே ஆசிரியர் ஒருவர்கூடப் பிள்ளைகளைப் பார்த்து 'உனக்குப் படிப்பு வராது' என்று சொல்வதில்லை. ஆகவே எல்லோரும் வளர்ந்து
— 9 —