பக்கம்:பூவும் கனியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைஞர்களுக்கு அறிவுரை



யும் நாட்டு அரசிற்குமட்டுமே விட்டுவிடாமல் பொது மக்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்; விரைவில் பகிர்ந்துகொண்டு வேகமாகப் பணிபுரியவேண்டும். அப்படிப் பகிர்ந்துகொள்ள முடியுமா? என்ற ஐயம் எழலாம். முடியும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. இன்றும் நாட்டில் நடக்கும் 'தர்மங்களை'ப் பார்த்தவர் களுக்கு ஐயமிராது. நாட்டில் நடக்கும் அறங்களை யெல்லாம் கல்விக்கூடங்கள் மூலமாக நடக்கும்படி செய்வது நம்முடைய கடமை.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்'


என்ற காலத்திற் கேற்ற நல்லுரையை எடுத்துக் காட்டி, கல்விப்பணிக்கான எல்லா உதவிகளையும் செய்யக் கேட்டுக்கொள்ளுகிறேன்.


சாதி வேற்றுமை

சாதி உயர்வு தாழ்வு நம்மைப் பிடித்துள்ள மற்றொரு பெரு நோய்; தமிழர்கள் நல்ல நிலையில் இருந்த காலத்தே இல்லாத நோய்; இடையிலே பெற்ற நோய்; விரைவில் ஒழிக்கப்பட வேண்டிய நோய். `உயர்வு தாழ்வு எங்கு இல்லை ? ஒவ்வோர் இடத்தில்

— 21 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/27&oldid=492916" இலிருந்து மீள்விக்கப்பட்டது