இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை |
'மேடைப் பேச்சு' என் அலுவலின் ஒரு பகுதியாகிவிட்டது. அங்கும் இங்கும் சில அன்பர்கள் அப் பேச்சுக்களில் சிலவற்றை ஒலிப்பதிவு செய்து காப்பாற்றி வைத்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றி.
அவற்றை நேரில் கேட்க முடியாதவர்கள், படிப்பது பயனுடைய தாகும் என்று நண்பர்கள் கருதினார்கள். என்னை நானே எப்படி எடைபோட முடியும் ? ஆகவே, நண்பர்களின் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டு, அவற்றில் சிலவற்றைப் 'பூவும் கனியும்' என்ற நூலாக வெளியிட இசைந்தேன். 'அடித்தா? அணைத்தா?' என்ற நூலை ஆதரித்து ஊக்கியதைப்போல் இதையும் ஏற்று, மேலும் ஊக்குவிக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.
இந் நூலை வெளியிட அனுமதித்த சென்னை அரசியலாருக்கு என் நன்றி உரியதாகும். ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் தொண்டாற்றும் கலைக்கதிர் ஆசிரியர், நல்லார் நண்பர், திரு. ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் இந்நூலை வெளியிட முன் வந்தமைக்கு நன்றியுடையேன்.