இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந் நூலில் வரும் கருத்துக்களும் கொள்கைகளும் என் சொந்தக் கருத்துக்களும் கொள்கைகளுமே. ஆகவே, அவற்றிலுள்ள குற்றங்களுக்கு நானே பொறுப்பு. அரசியலாரை அவை எவ்விதத்திலும் சம்பந்தப்படுத்தா; குற்றத்தை நீக்கி, குணமிருப்பின் அதை மட்டும் கொள்ளும்படி கோருகிறேன்.
நெ து. சுந்தரவடிவேலு
26 —–1 —– '58
இந் நூலைக் கனிவோடு ஏற்று, இரண்டாம் பதிப்பு வெளியிடும் தேவையை உண்டாக்கிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இவ்விரண்டாம் பதிப்பை வெளியிடும் கலைக்கதிருக்கும் என் நன்றி. இப் பதிப்பையும் விரைந்து பெற்று, பூக்கள் பல கனியாகுமாறு துணைபுரியும்படி தமிழ்ப் பெருமக்களைக் கோருகிறேன்.
நெ. து. சுந்தரவடிவேலு
27—–5—–59