பக்கம்:பூவும் கனியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விப் பயன்



என்று சொல்லாதவர்கள். அப்பா, அம்மா பார்க்காத சினிமாவையெல்லாம் பார்க்கிறோமே, அதற்குமட்டும் அப்பா அம்மாவுக்குப் பயப்படுவதில்லையே! ஆனால் ஒரே இனமாக இருக்கமட்டும் சாக்குப் போக்குச் சொல்லலாமா? மற்றவர்கள் எப்படிச் சொன்னாலும், மாணவர்கள் சொல்லக்கூடாது. இங்கே இப்போது வழிகாட்டிகளாய் இருப்பதுபோல, ஒரே சமுதாயம் ஏற்படுவதற்கு வாழ்க்கையிலும் வழிகாட்டவேண்டும் என்று இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எது உத்தியோகம் ?

`நீங்கள் படிக்கவேண்டும். படித்தவர்கள் எல்லோரும் அரசியலில் அலுவல் பார்க்கவேண்டும்' என்றால், எழுதுவதுதான் உத்தியோகம் என்றும், அதிகாரம் பண்ணுவதுதான் உத்தியோகம் என்றும் எண்ணிவிடாதீர்கள். அந்த மாதிரி உத்தியோகம் விரைவில் குலைந்துபோகும். தொழில் செய்வதும் உத்தியோகம்தான்; பாடுபடுவதும் உத்தியோகம் தான். இயந்திரம் ஒட்டுவதும் உத்தியோகம்தான்.

பசியும் படிப்பும்

நம் நாட்டில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதாது. கட்டுப்பாடு பண்ணியோ நல்லதனமாகவோ, உற்சாகம் ஊட்டியோ பள்ளிக்குக் கொண்டுவந்து விட்டால்மட்டும் என்ன பயன்? பள்ளிக்குப் போகும் பிள்ளைக்குப் பசி இல்லாமல்

— 59 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/65&oldid=493046" இலிருந்து மீள்விக்கப்பட்டது