பக்கம்:பூ மணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 வைத்தான். அடுத்த நிமிஷம் அவன் இமைகள் இணைந்து கொண்டன. பூமாவிற்குக் கணவனின் செய்கை அழுகையை வரவழைத்தது, சொல்ல வேண்டுமென்றிருந்த நகைச் சுவைத் துணுக்கை மனதிற்குள் அழுத்திவிட்டு, விடுவிடு? வென்று நடந்தாள். அவள் தலையில் பாராங்கல்லை வைத்ததுபோல் இருந்தது ; விேண்விண்? என்று தெறித்தது. கூடத்திற்குப் போய் ஊஞ்சலில் உட்கார்ந்த பூமாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணிர். கரந்து அழகிய அவள் முகத்தை நனேத்து வருடிக்கொண்டிருந் தது. கடந்த சம்பவங்களே ஏடு ஏடாகப் புரட்டிப் பார்த் தாள். அப்போது அவளுக்கு எதிர்காலம் பயங்கரமாகத் தெரிந்தது. 'உம்' என்று முகத்தைக் கடுமையாக வைத் திருக்கும் பதியின் விந்தைப் போக்கை மீண்டும் மனத் திற்குக் கொண்டுவரக்கூட பயம் பிடுங்கித் தின்றது. அவள் உடலில்-உள்ளத்தில் அணு அனுவாக ஏதோ ஒன்று அரித்துத் தின்பது போன்ற வேதனே-நடுக்கம் பரவியது. து.ாண்டில் புழுவாகத் துடித்தாள் அவள்! துாண்டில் புழுவின் துடிப்பு தூண்டிலுக்குத் தெரிய முடியுமா ? துண்டில் பிடிப் போனுக்குத்தான் தெரியுமா? ஆகுல் அந்தப் புழுவிள் நிலை..முடிவு...! - பொழுது புலர்ந்தது வளர்ந்தது மறைந்தது. வழக்கம்போல ராஜேந்திரனின் நடவடிக்கைகள் நடந்தேறின. காலேயில் படுக்கையை விட்டெழுந்ததும், அங்கே அவனுக்குப் பல் துலக்குவதற்கான சாதனப் பொருள்கள் காத்திருக்கும். அடுக்களையில் வெந்நீர் காய்ந்து கச்சிதமாக இருக்கும், பிறகு சாப்பாடு. மத்தி யானத்திற்கு டிபன் ; பிளாஸ்கில் காபி. மாலேயில் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்து உடுப்புக் களைந்தானதும் மீண்டும் காபி. இரவு சாப்பாடு-உறக்கம்-இப்படி ஒவ்வொன்றும் சந்திரம்போல இயங்கின; இயங்கப்பட்டன. o と。一7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/107&oldid=835324" இலிருந்து மீள்விக்கப்பட்டது