இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Í G5 காபியும் கையுமாக வந்த பூமா, தன் துணைவருடன் தோளோடு தோள் நிற்பவளேப்போல ஒட்டி நின்ற அந்த அழகியைக் கண்டதும் வாயடைத்து மலைத்து நின்று கொண்டிருந்தாள். யார் இவள்...? 'காபி இருக்கிறது.?? ராஜேந்திரனுக்கு பூமாவின் விண்ணப்பம் காதில் விழுந்தது. ஆனல் அவன் போய்விட்டான் அவளுடன். பூமாவின் அழுகை வளர்ந்தது. அதே சமயம் அன்று நாடகத்துக்குப் புறப்பட்டபோது, ரிக்ஷாவில் குறுக்கிட்ட பெண்ணக் கண்டதும் தன் கணவன் மயங்கி விழுந்த சம்பவமும் நினைவு வந்தது. ஆனல் அந்தப் பெண் மல்லி காவைப் பற்றி பூமா என்ன அறிவாள் ? - ராஜேந்திரனுடன் வந்த அழகி பூங்குழலி-அவன் சிநேகிதி...!