பக்கம்:பூ மணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 18 முடியும் ? அடிக்கொருமுறை என்னிடம்-என் ஒருத்திக்கே அவர் உள்ளம் ஒப்பந்தம் செய்யப்பட்டது போலக் கூறிய தெல்லாம் பகட்டுத்தா ை?? - பெண்புத்தி பிறப்பித்த எண்ணம் சாரம் பெறவில்லை; அவள் அமைதி பெறவில்லே தன் உள்ளத்தைத் திறந்து காட்டி, அதன் தலைவாயிலில் அன்பு வெள்ளம் பெருக் கெடுத்து ஓடச்செய்து, மறுபடியும் தாம்பத்தியம் உயிர்ப் படைய எண்ணங்கொண்டிருந்த அவளுக்கு இந்த இடி பெரும் வேதனையைத் தந்தது. மல்லிகாதான் அவள் கணவனே மயக்கிவிட்டாள் எனக் கொண்டிருந்த பூமா அவளே மாயக்காரி என்று சபித்துக் கொட்டினுள். - ஒரு பெண்ணின் கண்ணிரில் இன்னுெரு பெண் களிப்புக் காணுவதைக் கண்டு அவள் விரக்தியடைந்தாள். வாழ்வு அவளுக்கு விடுகதையாகப்பட்டது. விடுகதைக் குக்கூடக் கடைசியில் விடை கிடைத்து விடுமே! மல்லிகா வின் மீதுதான் பூமாவின் ஆத்திரம் பூராவும் ஆரோ கணித்து விட்டிருந்தது. ஆல்ை உண்மை...! அவராவது வருவதாவது ???-பூமா இப்படி வாய் விட்டுத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அதற்கு எதிரொலியாக வாய்விட்டுச் சிரிப்பதைப்போலச் சில வார்த்தைகள் கடந்த நிகழ்ச்சியின் பின்னணியில் புறப் பட்டன. . . . ரோஜாவாக மலர்ந்தும் மதிப்பில்லேயானுல் பிறகு முள்ளாகச் சுருக்கென்று தைத்துவிட வேண்டுமென்பது தான் என் கொள்கை...? * அன்று ரேடியோ நாடகமொன்றில் கேட்ட அவ். வார்த்தைகள் அவளுள் புரட்சியாக மாறிக் கனலை எழுப்பிக் கொண்டிருந்தன. அவளது இதயத்தின் இதயத்தினுள்ளே பெண்மைகனன்றது; ரோஜா முள்ளாகியது-பெண் பேய் ஆளுள்...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/124&oldid=835359" இலிருந்து மீள்விக்கப்பட்டது