இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதினேழு :
- புற ய !??
'அழகோவியம் ? புன்னகையும் புது நிலவும் கை கோர்த்து சடுகுடு’ ஆட்டம் விளையாடுவதைப்போல, பொன் வெயிலில் அந்தப் பொன் எழுத்துக்கள் பொன்னொளி பெற்றுப் பிரகா சித்துக் கொண்டிருந்தன. இயற்கையின் நியதி அது ; உதயம் மலர்ந்து சிலமணி நேரமே ஆன ஆனந்தவேளே அது. சுற்றுச் சார்பு அப்படி; இன்ப உணர்வைப் பாய்ச் சிடும் படத்தயாரிப்பாளர் பங்களா அது; அதுவே சினிமா ஸ்டுடியோவுங்கூட. பின் கேட்பானேன்...? மண்ணில் பூத்ததற்குப் பயன்கண்டு பூக்கள் பூத்திட்ட பூங்கொடிகள் சிரித்துக்கொண்டிருந்தன. ஒரே சரத்தில் தொடுக்கப்பட்ட கதம்ப மலர்களென ஆங்காங்கு பல பல வண்ணமலர்கள் வாய்மூடி மெளனிகளாக நின்று பார்ப்ப வரையும் போதையில் வாய்மூடி மெளனிகளாகிவிடச் செய்து கொண்டிருந்தன. இயற்கையின் அனுபவிப்பும் ஏறக்குறையக் கள்வெறி போலத்தானே...?