பக்கம்:பூ மணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 36 எதிரே காட்சி தந்துகொண்டிருந்த ஒரு செட்” டைரக்டரின் கருத்தைத் தன் வயப்படுத்திக் கொண் டிருந்தது. அன்னபூமி’ படத்தின் கடைசிக் காட்சிக்கான அலங்காரப் பந்தல் அது. காதலர்கள் ஒன்றுகூடி டு யட்சி பாடி மகிழுவதற்கான இயற்கைப் பின்னணியுடன் அழகாக அமைக்கப்பட்டிருந்த காட்சி அது. இன்னும் அப்படியே நின்றது. விழிவட்டம் சாய்ந்தது. கண்கவரும் அலங்கார மேடை அது. அன்னே பூமி’ உள்ளடக்கிக் கொண்டதுதான் அதுவும். காதலர்களின் களிப்புக்கு பொழுதுபோக்கு வேண்டுமல்லவா ? அதற்கான நடனமேடை அது. அழகோவியம் உரிமையாளர் சந்திர சேகரனின் புதல்வி பூங்குழலியின் நடனம் அதில்தான் நடந்து படமாக்கப்பட்டது. அன்ருெரு நாள் பட்டணத்தில் மயிலே ஒளவை அனுதை விடுதியின் வளர்ச்சிக்கென பூங்குழலி இலவச நடனம் ஆடினுளல்லவா ? அதே நடனம்தான் 'அன்னே பூமி யிலும் இடம் பெற்றிருந்தது. அடிநாளில் பூங்குழலியின் நடனத்தைக் காணமுடியாது போய்விட்ட ராஜேந்திரன் அன்று அவளது எழில் நடனத் தைக் கண்டு ரசித்தான்; மகிழ்வு பெற்றன். - நினைவுகள் ஏடு புரண்டன; காலம் தடம் புரண்டது. ராஜேந்திரனின் உணர்வு சடக்கென்று ஒரு இடத்தில் நிலைபெற்றது. பிரேக் போட்டதும் சடுதியில் நிற்கும் சிபிளஷர் போல. கடந்த நிகழ்ச்சி நிகழ் காலத்தின் எல்லேக் கோட்டில் வந்து நின்றது. அவன் எண்ணினுன், எண்ணத் தூண்டியது உள்மனம். 'காரம்போர்’டில் அடுக் கப்பட்டிருக்கும் விளையாட்டுக் காய்கள் போல, திரைப் படக் காட்சிகள் போல நினைவுகள் அருகருகாகப் பிறந் தன. நினைவுகள் பிறக்கின்றனவென்ருல், ஏன் இப்படி அவன் உடல் கனிந்த தணலாகி விடுகிறது ? அப்படி யென்ருல் ஏன் அக்ககைய நினைவுகள் பிறக்கவேண்டும்..?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/142&oldid=835400" இலிருந்து மீள்விக்கப்பட்டது