இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Í 46 வாறு ஒன்று, இரண்டு, மூன்று இப்படிப் பல முறைகள் மாயாவின் படத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். பூமாவைப் படம் பிடித்தது போலமைந்த மாயாவின் உருவம் அவனுக்கு மாயையாகவே தென்பட்டது. படத் தையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவன் மனப்புதிர் விடுபடவில்லே. படைப்புப் புதிருக்கே முதலில் விடை காணமுடிவில்லேயாம்; மனப்புதிர் விடுபட்டு விடுமா...? அயன் ஒரு கலைஞன்; கலாவிற்பன்னன்-ஒரே வார்ப்பில் ஒரே அச்சாக இரண்டு உருவங்கள் சமைத்து விடுவான் போலும்! இரட்டையர் அபூர்வப் பிறவிதான். ஒரே சாயலில் இரண்டு உருவங்களைப் படைத்து விந்தை புரிவதுதான் அவன் ஆக்கத்தின் அந்தரங்கமோ! அதுவே தான் அவனது கலே நுணுக்கத்தின் வெற்றிச் சின்னமோ? இது வாழ்க்கைப் புதிரா? அல்லது மனப்புதிர்தானே...?