பக்கம்:பூ மணம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகா நினைத்துப் பார்த்தாள். ஞாபகம் கை கொடுக்க வில்லை. எல்லாம் புதிரின் புதிராகப்பட்டது அவளுக்கு. ஆகுல்...! நடிகை மாயா தன்ன அடிக்கடி கவனிப்பதை அறிந்த மல்லிகாவுக்கு லஜ்ஜை மேலிட்டது. அழகின் தராதரத்தில் மலேக்கும் மடுவிற்குமிடையே உள்ள வேற்றுமை, தனக்கும் மாயாவுக்கும் இருப்பதறிந்து அவள் வாதனை வளர்ந்து தன் முகத்தில் பதிந்திருக்கும் அம்மை வடுக்களை நினைக்கக் கூட அவள் நெஞ்சம் துணுக்குற்றது. குழந்தை அழுத சப்தம் காதைத் துளைத்தது. மல்லிகா ஒடிச்சென்று குழந்தையை எடுத்து அதன் அழுகையை அடக்குவதற்குள் அவள் தாவு தீர்ந்துவிட்டதெனலாம். புட்டிப்பால் புகட்டினதும் குழந்தை கப்சிப் என்று மல்லிகாவின் அரவணைப்பில் அடங்கியது. அவள் சிரித்துக் கொண்டாள். நிம்மதி. மல்லிகாவின் தோளில் சாய்ந்திருந்த குழந்தையை விழுங்கி விடுபவள்போலப் பார்த்துக் கொண்டிருந்த நடிகை, மல்லிகாவைப் பார்த்து 'மல்லிகா, குழந்தை உள்களதா?’ என்ருள். மாயாவின் கேள்வியால் விரல் சுண்டிவிடும் நேர்ம் தடுமாறிய மல்லிகா. தடுமாறிய குரலில் சிலகண நேரம் சென்று ஆ.மா...ம்’ என்ருள். அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. z சற்று என்னிடம் கொடுக்கிறீர்களா??? ஆஹா: அவள் நீட்டிய குழந்தையை வாங்கி அப்படியே தூக்கி முத்தமிட்டாள் மாயா. அவள் உதடுகளில் தேன் ஊறியது. நெடுமூச்சு புறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/159&oldid=835433" இலிருந்து மீள்விக்கப்பட்டது