பக்கம்:பூ மணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அவள் கூறும் வழி சரி என்றுபட்டது மல்லிகாவுக்கு. - ஆல்ை ராஜேந்திரனே எப்படி நேருக்கு நேர் நின்று பார்ப்பது? ஆம், குழந்தையை மாயா மூலம் அனுப்பி அவரிடம் சேர்ப்பிக்கச் செய்து விட்டால்......பூமாவின் வேண்டுகோள் நிறைந்து விடும். ராஜேந்திரனே ஏன் நேரில் பார்க்கவேண்டும்? ஆம்; இதுவே சரி...? ஒரு பக்கம் சாய்ந்து பேசியது அவள் மனம். ‘என்ன, குழந்தையை அவள் மூலம் அனுப்புவதா? ஊஹ9ம்; கூடாது. நேரில் சென்று ராஜேந்திரனிடம் கொடுத்துத் திரும்புவதுதான் உசிதம். கதையைப் பற்றி சமயம்போலப் பார்த்துக்கொள்ளலாம். தெய்வமே, நான் எதிர்பார்க்கும் அதே ராஜேந்திரளுக மட்டும் இந்த டைரக்டர் ராஜேந்திரனும் அமையச்செய். இந்த என் ஒரு பிரார்த்தனையாகிலும் நிறைவேறட்டும். மாயாவுடன் மல்லிகாவும் புறப்படச் சம் ம த ம் தெரிவித்தாள். இது கண்டு நடிகை முகம் மலர்ந்தாள். பல பல நாட்களுக்கப்புறம் அப்போதுதான் மல்லிகாவின் முகமும் மலர்ந்தது. அத்தி பூத்தாற் போல! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/162&oldid=835438" இலிருந்து மீள்விக்கப்பட்டது